சம்பளத்தை உயர்த்தும் நிறுவனத்திற்கு இணை நிதி

சம்பளத்தை உயர்த்தும் நிறுவனத்திற்கு இணை நிதி

2 mins read
96144ef2-2ba3-4fd3-b3de-d8beda532c9b
-

குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை உயர்த்­தும் முத­லா­ளி­கள் புதிய திட்­டத்­தின்­கீழ் அடுத்த ஐந்­தாண்­டு­க­ளுக்கு இணை நிதி­யைப் பெற உள்­ள­னர்.

இந்த ஆண்­டும் அடுத்த ஆண்­டும் உயர்த்­தப்­படும் சம்­ப­ளத்­தில் 50 விழுக்­காட்டை அர­சாங்­கம் வழங்­கும். இந்த விகி­தம் 2024 மற்­றும் 2025ஆம் ஆண்­டு­க­ளுக்கு 30 விழுக்­கா­டாக இருக்­கும்.

தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு அர­சாங்­கம் 15 விழுக்­காட்டை வழங்­கும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தமது வர­வு­செ­ல­வுத் திட்ட உரை­யில் குறிப்­பிட்­டார்.

புதிய படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள உத­வித் திட்­டத்­தின்­கீழ், மொத்த மாத ஊதி­யம் $2,500 வரை ஈட்­டும் சிங்­கப்­பூ­ரர் அல்­லது நிரந்­த­ர­வாசி ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தி­யி­ருக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­குப் பொருந்­தும்.

மாத ஊதி­யம் $2,500க்கு மேல் $3,000 வரை இருந்­தால் அவர்­

க­ளுக்­கான அர­சாங்க இணை நிதி இந்த ஆண்­டும் அடுத்த ஆண்­டும் 30 விழுக்­கா­டாக இருக்­கும்.

அதே­நே­ரம் 2024ஆம் ஆண்­டில் உயர்த்­தப்­படும் சம்­ப­ளத்­தில் 15 விழுக்­காட்டை அர­சாங்­கம் வழங்­கும்.

இந்த ஆத­ர­வுத் திட்­டத்­திற்­குத் தகு­தி­பெற, முத­லா­ளி­கள் தங்­க­ளது ஊழி­ய­ருக்கு குறைந்­த­பட்­சம் $100 சம்­பள உயர்வு அளிக்­க­வேண்­டும்.

அர­சாங்­கத்­தின் இணை நிதி, சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தால் தகுதிபெறும் முத­லா­ளி­க­ளின் கணக்­கில் தாமாக வரவுவைக்­கப்­படும்.

சம்­பள உயர்வு வழங்­கப்­பட்ட பின்­னர் ஆண்­டின் முதல் காலாண்­டில் இந்­நிதி அளிக்­கப்­படும்.

இந்த நிதித் திட்­டத்­திற்­கு தொடக்­க­மாக இந்த ஆண்டு $2 பில்­லி­யன் ஒதுக்­கப்­படும் என்று திரு வோங் கூறி­னார்.

"வர்த்­த­கர்­கள், பய­னீட்­டா­ளர்­கள் மற்­றும் வரி­செ­லுத்­து­வோர் என நாம் அனை­வ­ரும் நமது குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் நிலையை உயர்த்த நமது பங்­கை­யும் பங்­க­ளிப்­பை­யும் செய்ய வேண்­டும்," என்று திரு வோங் கேட்­டுக்­கொண்­டார்.

குறைந்­த­பட்ச ஊழி­யர்­கள் தொடர்­பாக முத்­த­ரப்புப் பணிக்­குழு அளித்த பரிந்­து­ரை­களை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொள்­வ­தாக கடந்த ஆண்டு தமது தேசிய தினப் பேரணி உரை­யில் பிர­த­மர் லீ சியன் லூங் குறிப்பிட்டிருந்தார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­

மு­றையை சில்­லறை வர்த்­த­கம், உணவு சேவை­கள் மற்­றும் கழிவு நிர்­வா­கத் துறை­க­ளுக்­கும் நீட்­டிப்­பது அந்­தப் பரிந்­து­ரை­களில் அடங்­கும்.

வெவ்­வேறு திறன் படைத்த ஊழி­யர்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச சம்­ப­ளத்­தை­யும் பயிற்­சி­யை­யும் வழங்க படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­ முறை வழி­செய்­கிறது.

இந்த ஆண்டு செப்­டம்­பர் முதல் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலை­யில் அமர்­த்தி­யுள்ள நிறு­வ­னங்­களும் தங்­க­ளது எல்லா உள்­ளூர் ஊழியர்­ க­ளுக்­கும் குறைந்­த­பட்ச உள்­ளூர் தகு­திச் சம்­ப­ளத்தை வழங்­க­வேண்­டும்.

தற்­போது அந்­தத் தொகை மாதத்­திற்கு $1,400 என நிர்­ண­யிக்­கப்­பட்டுள்­ளது.

குறைந்த வருமான ஊழியர்களின் நிலையை மேம்படுத்த கைகொடுக்கிறது அரசாங்கம்