கரிம வரி கூடும்

கரிம வரி கூடும்

1 mins read
a4e03183-8c1b-41d2-8e3e-f011cc3ee4ac
-

சிங்­கப்­பூ­ரில் நிறு­வ­னங்­கள் வெளி­யி­டும் கரி­மத்­துக்­கான வரி கூடு­கிறது. இப்­போது ஒரு டன் கரிமத்தை வெளி­யிட்­டால் $5 வரி ­செலுத்த வேண்­டும். இந்த வரி, 2030ஆம் ஆண்டுவாக்­கில் $50 முதல் $80 வரை உய­ரும் என்று நேற்று நாடாளுமன்­றத்­தல் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அறி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் ஆண்­டுக்கு 25,000 டன் அல்­லது அதற்­கும் மேற்­பட்ட அள­வுக்குக் கரி­மத்தை வெளி­யி­டும் நிறு­வ­னங்­கள் கரிம வரி­யைச் செலுத்த வேண்­டும்.

நிறு­வ­னங்­கள் வெளி­யி­டும் கரிம அள­வைக் குறைத்து சுற்றுப்புறத்­தை பாதுகாக்­கும் நோக்­கத்­தில் 2050ல் அறவே கரிமக் ­க­ழிவு இல்­லாத நிலையை உருவாக்குவது சிங்­கப்­பூ­ரின் இலக்கு என்­றும் அமைச்­சர் சொன்னார்.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் அதிக கரி­மத்தை வெளி­ யிடும் நிறு­வ­னங்­கள், அனைத்­து­லக கரிமத் தவிர்ப்பு ஆத­ர­வு அனு­மதி சான்­றி­தழை வாங்கி, தாங்கள் செலுத்த வேண்­டிய கரிம வரியை அதன் மூலம் குறைத்­துக்கொள்­ள­லாம்.

இதன் மூலம் ஐந்து விழுக்காடு வரை வரிக் கழிவு பெற முடியும் என்று நிதி அமைச்சர் தெரிவித் தார்.