$35 பில்லியன் மதிப்புள்ள பசுமைப் பத்திரங்கள்

$35 பில்லியன் மதிப்புள்ள பசுமைப் பத்திரங்கள்

1 mins read
29f00a26-88d2-447b-b2c1-c757926d5c1c
துவாஸ் நெக்சஸ் ஒருங்கிணைந்த கழிவு நிர்வாக ஆலையைக் காட்டும் ஓவியரின் வரைபடம். சிங்கப்பூரில் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படம்: தேசிய சுற்றுப்புற வாரியம் -

சிங்­கப்­பூ­ரில் பொதுத் துறை­யின் பசுமை உள்­கட்­ட­மைப்பு வசதி திட்­டங்­க­ளுக்கு நிதி வளத்­தைப் பெருக்­கும் வகை­யில் 2030 ஆம் ஆண்­டு­வாக்­கில் ஏறக்­கு­றைய $35 பில்­லி­யன் பசு­மைப் பத்திரங்­கள் வெளி­யி­டப்­படும்.

பசு­மைப் பத்­தி­ரங்­கள் என்­பவை நிதித்­துறை பத்­தி­ரங்­கள். சுற்­றுப்­புற ஆத­ர­வுத் திட்­டங்­க­ளுக்கு அவற்­றின் மூலம் நிதி பெற முடி­யும்.

அந்த பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­வோ­ருக்கு முறை­யாக அல்­லது நிரந்­த­ர­மாக வரு­வாய் கிடைக்­க­வும் வாய்ப்பு உண்டு.

அர­சாங்­கம் சிங்­கப்­பூர் பசு­மைப் பத்­தி­ரங்­கள் கட்­ட­மைப்பு ஒன்றை வெளி­யி­டும். இந்த ஆண்டு பிற் பகு­தி­யின் தொடக்­க­மாக இந்­தப் பத்­தி­ரங்­கள் வெளி­யி­டப்­படும்.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தனது வர­வு­செ­ல­வுத் திட்ட உரை­யில் இதனை தெரி­வித்­தார்.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் முதல் அர­சாங்க அமைப்­பாக சென்ற ஆகஸ்ட்­டில் $3 பில்­லி­யன் பல நாணய நடுத்­தர ரக பத்­தி­ரங்­கள் மற்­றும் பசு­மைப் பத்­தி­ரங்­கள் கட்­ட­மைப்பை தொடங்­கி­யது.

அந்­தப் பத்­தி­ரங்­கள் மூலம் கிடைக்­கும் தொகை சுற்­றுச்­சூ­ழல் உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.