வங்கிகள் அவற்றின் வாடிக்கை
யாளர்களிடம் நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் எதிர்பார்க்கிறது. வங்கிகள் அவற்றின் சேவைகளுக்காக வசூலிக்கும் கட்டணத் தொகை குறித்து ஆணையம் குறுக்கிடாதபோதிலும் இந்த எதிர்பார்ப்பு
அதனிடம் உள்ளது. தாமதமாகச் செலுத்தப்படும் கட்டணங்களுக்கான கூடுதல் தொகை, வட்டி விகிதம் ஆகியவற்றைக் கடன் அட்டை அறிக்கையில் வங்கி தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.
முந்திய மாதத்துக்கான கடன் அட்டை கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்குக் கடனை முழுமையாக அடைக்க அவர்களுக்கு வழங்கப்படும் கால அளவு, வட்டி மற்றும் இதர கட்டணங்கள் உட்பட செலுத்த தேவையான மொத்த தொகை ஆகிய விவரங்களை கட்டண அறிக்கையில் வங்கி குறிப்பிட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்தது.
"கடன் அட்டை கட்டணங்கள் குறித்து வெளிப்படையான தகவல்கள் இருந்தால் தங்களுக்குத் ஏற்புடைய, தேவையான சேவையை வாடிக்கையாளர்கள் தேர்ந்
தெடுக்கலாம்," என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர்
ஆல்வின் டான் நேற்று நாடாளு
மன்றத்தில் தெரிவித்தார்.
"கடன் அட்டைக்குப் பதிவு செய்வதற்கு முன்பு அதுதொடர்பான விவரங்கள், நிபந்தனைகள் பற்றி வங்கி வாடிக்கையாளர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்," என்றார் திரு டான்.
மவுண்ட்பேட்டன் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லிம் பியாவ் சுவான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் திரு டானின் உரை அமைந்தது.

