விழுந்த பாரந்தூக்கி; யாருக்கும் காயம் ஏற்படவில்லை

விழுந்த பாரந்தூக்கி; யாருக்கும் காயம் ஏற்படவில்லை

1 mins read
942b4cd7-8d16-45da-93de-f96deae1322f
விழுந்து கிடந்த பாரந்தூக்கி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

பெஞ்­சுரு வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு கட்­டு­மா­னத் தளத்­தில் பாரந்­தூக்கி ஒன்று விழுந்­தது.

இந்­தச் சம்­ப­வம் நேற்று காலை 10 மணிக்­கும் 11 மணிக்­கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்­தது.

பாரந்­தூக்கி விழுந்து கிடப்­ப­தைக் காட்­டும் படங்­களை வாச­கர் ஒரு­வர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்கு அனுப்பி வைத்­தார். தரை­யில் கிடந்த பாரந்­தூக்­கி­யைச் சுற்றி இடி­பா­டு­கள் இருப்­ப­தைப் படங்­க­ளால் காண முடிந்­தது.

சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்று நம்­பப்­ப­டு­கிறது. பாரந்­தூக்கி விழுந்­தது குறித்து தனக்­குத் தக­வல் ஏதும் கிடைக்­க­வில்லை என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

மனி­த­வள அமைச்­சின் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார அறிக்­கை­யின்­படி, கடந்த ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 23 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­கின.

2020ஆம் ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 17 வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­தன.

2020ஆம் ஆண்­டின் பிற்­பா­தி­யில் 13 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­கின.