பட்ஜெட்: எல்லாருக்கும் வாய்ப்பு, வளம்; நிதி மீள்திறன்; எதிர்காலத்திற்கு ஆயத்தம்

பட்ஜெட்: எல்லாருக்கும் வாய்ப்பு, வளம்; நிதி மீள்திறன்; எதிர்காலத்திற்கு ஆயத்தம்

5 mins read
efb5b285-338c-4270-8ef6-415e563ec287
விக்ரம் கண்ணாஇணை ஆசிரியர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நாடாளு மன்­றத்­தில் முதன்­மு­த­லாக தாக்­கல் செய்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின் பல அம்சங் களிலும் ஒவ்­வொ­ரு­வ­ரின் ஆற்­றல் முதல், தேவைவரை அனைத்­தும் எதி­ரொ­லிக்­கின்றன.

அதோடு, நிறு­வ­னங்­க­ளின், ஊழி­யர்­களின் ஆற்­றல்­களை மேம்­ப­டுத்தி, கரிம பாதிப்­பு­களை வேக­மாகக் குறைத்து, பொது நிதி­வ­ளத்­தைப் பலப்­ப­டுத்தி அவற்­றின் மூலம் எதிர்­கா­லத்­திற்கு ஏற்ப பொருளியலை ஆயத்­த­ப்படுத்த தேவை­யான அம்­சங்­களும் அந்­தத் திட்­டத்­தில் உள்­ளன.

கடந்த 2020 மற்­றும் 2021ல் தாக்­க­லான பல வர­வு­செ­ல­வுத் திட்­டங்­களும் கொவிட்-19 தொற்று பாதிப்­பு­க­ளைச் சமா­ளித்து அவற்­றில் இருந்து தப்­பிப்­ப­தில், வேலை­க­ளைப் பாதுகாப்­பதில், நிறு­வ­னங்­கள் தொடர்ந்து செயல்­பட உத­வு­வதில் பெரி­தும் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்­தின.

2022 வர­வு­செ­ல­வுத்­திட்­டம் வரு­வாய் அம்­சங்­க­ளைக் கொண்­டுள்ள ஒரு திட்­டம் என்று நினை­வில் கொள்­ளப்­படும்.

இந்­தத் திட்­டத்­தில் துணிச்­ச­லான புதிய அம்சங்­கள் உள்­ளன. பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உய­ரும் என்று ஏற்கெனவே எதிர்­பார்க்­கப்­பட்­டது.

அந்த வரியை 2025 வரை உயர்த்த வேண்டாம் என்று சில தொழிற்சபை­களும் விமர்­ச­கர்­களும் முன்­ன­தாக கோரிக்கை விடுத்திருந்­த­னர்.

பணவீக்கம் அதிகரிக்கிறது என்பதே இதற்கான காரணம் என்று அவர்கள் தெரி வித்தனர். கொவிட்-19 தொற்று காரணமாக சில நிறுவனங்கள் இன்னமும் போராடி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஒரே நேரத்­தில் 2% உயர்த்­திவிடலாம் என்று மற்­ற­வர்­கள் குரல் கொடுத்­த­னர்.

இந்த இரண்­டுக்­கும் இடைப்­பட்ட ஒரு நிலையை எடுத்த அர­சாங்­கம், 2023ஆம் ஆண்­டி­லும் 2024 ஆம் ஆண்­டி­லும் ஆண்டுக்கு 1% என்ற வகை­யில் இந்த வரியை உயர்த்த முடிவு செய்­துள்­ளது.

இந்த ஏற்­பாடு மக்­க­ளுக்­கும் நிறு­வனங்களுக்­கும் கால அவ­கா­சத்­தைக் கொடுக்­கும். அவர்­கள் புதிய நிலைக்­குச் சரி­செய்­து­கொள்ள உத­வும்.

என்­றா­லும், நிர்­வா­கத்­தைப் பொறுத்­த­வரை இந்த ஏற்­பாடு கொஞ்­சம் வசதி குறை­வா­ன­தா­கவே இருக்­கும். வரு­வாய் கிடைக்க அதிக காலம் ஆகும் என்­பதே இதற்­குக் கார­ணம்.

தனி­ந­பர் வரு­மான வரி உய­ரும் என்று அவ்­வ­ள­வாக எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை.

வரி விதிக்­கத்­தக்க $500,000 முதல் $1 மில்­லி­யன் வரையிலான வரு­வாய்க்கு 23% அள­வி­லும் $1 மில்­லி­ய­னுக்கு அதிக வரு­வாய்க்கு 24% வரி­யும் விதிக்­கப்­படும் என்று வர­வு­செ­ல­வுத் திட்­டம் தெரி­விக்­கிறது. இப்போது இந்த வரி 22% ஆக இருக்கிறது. 2024ல் சொத்து வரி­யும் அதி­கரிக்­கும்.

இவை ஆக அதிக வரி செலுத்­தும் 1.2 விழுக்­காட்­டி­னரை மட்­டும்­தான் பாதிக்­கும். அதே­போல் ஆக அதிக சொத்து வரி­ செ­லுத்தும் 7 விழுக்­காட்­டி­னரை மட்டும்­தான் சொத்து வரி உயர்வு பாதிக்கும் என்­ப­து­ இதில் குறிப்­பி­டத்­தக்­கது.

அவர்­களுக்கு இது கட்­டுப்­ப­டி­யா­கும்.

ஆடம்­பர கார்க­ளுக்கு அதி­க­ வரியை செலுத்த வேண்டி இருக்­கும். ஆடம்­பர கார் வரி உயர்வு கார­ண­மாக பாதிக்­கப்­படக்கூடி­ய­வர்­கள் இன்­னும் குறைவு.

இந்த வரி உயர்­வு­கள் கார­ண­மாக ஆண்­டுக்கு ஏறத்­தாழ $600 மில்­லி­யன் வரு­வாய் அரசுக்குக் கிடைக்­கும்.

இந்த நிதி வருவாய் ஏற்பாடுகள் ஒரு­பு­றம் இருக்க, வரு­வாய் குறைந்த மற்­ற­வர்­க­ளுக்­காக குறிப்­பி­டத்­தக்க பல ஏற்­பாடு­களை 2020 வர­வு­செ­ல­வுத் திட்­டம் கொண்­டி­ருக்­கிறது.

ஜிஎஸ்டி உயர்­வால் பாதிக்­கப்­ப­டக்­கூடிய நடுத்­தர, குறைந்த வரு­மான குடும்­பங்­களைப் பாது­காக்க ஜிஎஸ்டி உத்­த­ர­வாத தொகுப்­புத் திட்­டம் 10% ஆக உயர்த்­தப்­பட்டு $6.6 பில்­லி­ய­னாக்­கப்­பட்டு இருக்கிறது.

இதில் வியப்­ப­ளிக்­கும் ஒன்­றாக நிரந்­த­ர­மான ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்டமும் சேர்க்­கப்­பட்டு இருக்­கிறது.

குறைந்த வரு­மான பிரி­வி­னர், ஜிஎஸ்டி வரி உயர்வு மட்டுமின்றி, அனைத்து வரிகள் கார­ண­மாக ஏற்­படக்­கூ­டிய எல்லா சுமை களை­யும் சமா­ளித்­து­வி­டும் அள­விற்கு இந்த நிரந்­தர ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­டம் அவர்களுக்கு கை கொடுக்கும்.

மற்­ற­வர்­க­ளுக்கு ஒரு பகுதி பாது­காப்பை இது தரும்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை மேலும் பல துறை­க­ளுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது. இது சில்­லறை வர்த்­த­கத் துறை­யில் இருந்து தொடங்­கு­கிறது.

இத்­த­கைய ஊழி­யர்­களில் 94 விழுக்­காட்­டி­னரை உள்ளடக்­கு­வது இந்­தத் திட்­டத்­தின் இலக்­காக இருக்­கிறது.

'ஊழி­யர் உறு­துணை வரு­வாய் திட்டமும்' மேம்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இந்­தத் திட்­டம் குறைந்த வரு­வாய் நிலை­யில் இருக்­கும் 20% ஊழி­யர்­களில் அரை மில்­லி­யன் பேருக்கு உத­வும். இவை எல்­லாம் மொத்த மாக வரு­வாய் ஏற்­றத்­தாழ்வைக் குறைப்­பதில் பெரும் பங்­காற்­றும்.

வாய்ப்புகள், வளங்களை வழங்கி அதி­க­மான மக்­களை உள்­ள­டக்­க­வும் இது உறு­து­ணை­யாக இருக்­கும்.

இவற்­றுக்கு ஐந்­தாண்டு காலத்­தில் $9 பில்­லி­யன் செலவு பிடிக்­கும். இருந்­தா­லும் இது நல்ல பலன்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய செல­வி­ன­மா­கவே இருக்­கும்.

பொரு­ளி­யலை எதிர்­கா­லத்­திற்கு ஆயத்­தப்­ப­டுத்த உத­வும் பல அம்­சங்­கள் 2022 வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இருக்­கின்­றன.

மின்­னி­லக்க ஆற்­றலை மேலும் மேம்­படுத்­து­வது, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மேற்­கொள்­ளும் ஆய்வு, உரு­வாக்­கத் திட்டங்­க­ளுக்கு ஆத­ரவு அளிப்­பது, புத்­தாக்­கத்­து­டன் உல­க­ம­ய­மாகி மேம்­பட அவற்றுக்கு உத­வு­வது பல­வும் இவற்­றில் அடங்­கும்.

கரிம வரியை 2030ஆம் ஆண்டு வாக்­கில் 80 விழுக்­கா­டாக உயர்த்­து­வது என்பது துணிச்­ச­லான ஒரு முடி­வா­கத் தெரிகிறது.

நிறு­வ­னங்­கள் வெளி­யி­டும் ஒரு டன் கரி­மத்­திற்கு இப்­போது $5 வரி செலுத்த வேண்­டும். இது 2024ல் $25 ஆக­வும் 2030 ஆம் ஆண்டு வாக்­கில் $80 ஆக­வும் உய­ரும்.

கடந்த 2018ஆம் ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இந்த வரியை $10 லிருந்து $15 ஆக உயர்த்­து­வது என்று இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

ஆனால் இப்­போது கரிம வரியை அதற்கு மேலும் உயர்த்துவது என்று துணிச்­ச­லாக முடிவு எடுக்­கப்­பட்டு இருக்­கிறது. இந்த வரி உயர்வு சுற்­றுச்­சூ­ழல் வல்­லு­நர்­கள் கூட எதிர்­பார்க்­காத ஒன்­றாக இருக்­கிறது.

இருந்­தா­லும்­கூட கரிம வரி­யைப் பொறுத்­த­வரை இன்­ன­மும் முன்னே­றிய இதர நாடு­கள் அள­வுக்கு சிங்­கப்­பூர் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

எடுத்­துக்­காட்­டாக ஐரோப்­பிய ஒன்­றியத்­தில் சரா­சரி கரிம வரி US$42 (S$56) ஆக உள்­ளது.

ஆனாலும் கரிம வரியைப் பொறுத்தவரை ஆசிய நாடு­களுக்கு சிங்­கப்­பூர் முன்­னு­தா­ர­ண­மா­கத் திக­ழும்.

கரிம வரி மூ­லம் கிடைக்­கும் தொகை நிறு­வ­னங்­கள் கரி­மக் கழி­வைக் குறைத்­துக்­கொள்ள ஆத­ரவு அளிக்க செல­விடப்­படும்.

அதோடு மட்­டு­மின்றி எரி­சக்­தியை மிச்­சப்­ப­டுத்­தக்­கூ­டிய தீர்­வு­க­ளைக் காண்­பதற்­கான முத­லீ­டா­க­வும் இந்­தத்தொகை பயன்­படுத்­தப்­படும்.

இதன்­ தொ­டர்­பில் 2030ல் $35 பில்­லி­யன் பசு­மைப் பத்­தி­ரங்­களை வெளி­யிட திட்­டம் உள்­ளது.

இவற்றின் விளைவாக கரிம வர்த்­தகம் மற்­றும் பசுமை நிதி வளத்­திற்­கான வட்­டார மைய­மா­கத் திகழ்­வதற்குத் தோதான நிலை­யில் சிங்­கப்­பூர் மேம்­படும்.

மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், 2022 வரவு­செ­ல­வுத் திட்­டம் சரி­ச­மம், நவீன எதிர்­கா­லம் என்ற இரண்டு அம்­சங்­க­ளை­யும் மிக திற­மை­யு­டன் மிக விவேகமாக, நேர்த்தி யாக கலந்து உரு­வாக்­கப்­பட்ட ஒன்­றாக இருக்­கிறது.

இந்த வர­வு­செ­ல­வுத் திட்­டம் சிங்­கப்­பூரின் பொரு­ளி­ய­லை­யும் சமூ­கத்­தை­யும் கொவிட்-19 தொற்­றுக்குப் பிந்­தைய உலகில் முன்­னேற்றி கொண்டு செல்ல நீண்ட நெடுங்­கா­லத்­திற்கு உத­வும்.