தானா மேரா மனமகிழ் மன்றத்துக்கு $4,000 அபராதம்

தானா மேரா மனமகிழ் மன்றத்துக்கு $4,000 அபராதம்

2 mins read
1bf54947-673c-421f-b732-8cfd1ecfeecb
-

தக­வல் கசிவு தொடர்­பில் தானா மேரா மன­ம­கிழ் மன்­றத்­திற்கு $4,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு இருக்­கிறது. அந்த மன­ம­கிழ் மன்­றத்­தைச் சேர்ந்த ஊழி­யர் ஒரு­வர் TMCC@1234 என்ற தனது மின்னஞ்­சல் ரக­சிய எண்ணைக் கிட்­டத்­தட்ட ஐந்­தாண்டுகளாக மாற்­ற­ாம­லேயே இருந்­து­விட்­டார்.

கணினி ஊடு­ரு­வல் பேர்­வ­ழி­கள் அந்­தக் கணக்­கின் மூலம் 467 பேரின் சொந்த தக­வல்­களை எப்­ப­டியோ பெற்­று­விட்­டார்­கள். இதற்­காக அந்த மன­ம­கிழ் மன்றத்­துக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் தனிப்­பட்­டோர் தக­வல் பாது­காப்பு ஆணை­யம் என்ற ஓர் அமைப்பு தனிப்­பட்­ட­வர்­க­ளின் ரக­சிய தக­வல்­க­ளைக் கண்­கா­ணித்து வரு­கிறது.

அந்த அமைப்பு வெள்­ளிக்­கிழமை எழுத்து மூல­மான தனது முடிவை அறி­வித்­தது. சென்ற ஆண்டு பிப்­ர­வரி 22ல் நிகழ்ந்த அந்­தச் சம்­ப­வம் தொடர்­பில், தானா மேரா மன­ம­கிழ் மன்­றம் தன்­னு­டைய பொறுப்­பில் இருந்த தனிப்­பட்­ட­வர்­க­ளின் தக­வல்­களைப் பாது­காக்க போதிய நட­வடிக்கை எடுக்க தவ­றி­விட்­ட­தாக அந்த அறி­விப்பு தெரி­வித்­தது.

மன­ம­கிழ் மன்ற உறுப்­பி­னர்­கள் 155 பேரின் மின்­னஞ்­சல் முக­வ­ரி­கள், பொது­மக்­களில் 284 பேரின் மின்­னஞ்­சல் முக­வ­ரி­கள் கசிந்­து­விட்­டன. இதன் விளை­வாக அவர்­க­ளுக்குப் போலி­யான மோசடி மின்­னஞ்­சல்­கள் அனுப்­பப்­பட்­டன.

அதோடு, மேலும் 28 பேரின் பெயர்­கள், அடை­யாள எண்­கள், மின்­னஞ்­சல் முக­வ­ரி­களும் கசிந்து­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து தானா மேரா மன­மகிழ் மன்­றம் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னம் ஒன்று பரிந்­து­ரைத்த நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்தி இருக்­கிறது. அதன்­மூ­லம் இணை­யப் பாது­காப்பை அது மேம்­ப­டுத்தி இருக்­கிறது. தனது ரக­சிய குறி­எண் கொள்­கை­யை­யும் ஆவ­ணப்­படுத்தி இருக்­கிறது.