'அப்போட்' என்ற நிறுவனம் தயாரிக்கும் கைக்குழந்தைக்கான சில வகை அலிமெண்டம் மாவு சிங்கப்பூரில் மீட்டுக்கொள்ளப்படுகிறது.
அதில் பாக்டீரியா கிருமிகள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதே இதற்கான காரணம். அமெரிக்காவில் இருந்து வரும் அத்தகைய மாவை பெற்றோரும் பராமரிப்பாளர்களும் பயன் படுத்தக்கூடாது என்று நேற்று சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பு தெரிவித்தது.
அந்த மாவை உட்கொண்டதற்குப் பிறகு குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனடியாக மருத்துவரின் உதவியை அவர்கள் நாட வேண்டும்.
பாக்டீரியா கிருமி இருப்பதாகச் சந்தேகப்படும் மாவின் காலாவதித் தேதி 2022 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிந்தைய தேதியாக இருக்கும்.
பாக்டீரியா கிருமி இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மாவை மீட்டுக்கொள்ளும்படி அப்போட் லேபரட்டரிஸ் நிறுவனத்துக்கு இந்த முகவை உத்தரவிட்டு உள்ளது.
இந்த நடைமுறை இப்போது இடம்பெற்று வருவதாகத் தெரி விக்கப்பட்டு உள்ளது.

