குற்றச்சாட்டு மீட்கப்பட்டது

குற்றச்சாட்டு மீட்கப்பட்டது

1 mins read
d92b9b61-aa3e-44a4-95d1-cf3932b79cae
-

உற­வி­ன­ரான இளம் பெண்ணை பாலி­யல் வன்­செ­ய­லுக்கு ஆளாக்­கி­ய­தாக 20 வயது ஆட­வர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு நேற்று மாவட்ட நீதி­மன்­றத்­தில் மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. அவர் சுமார் 11 மாத காலம் விசா­ர­ணைக் காவலில் இருந்து பிறகு விடு­விக்­கப்­பட்­டார். குற்­ற­மற்­ற­வர் என்று நீதி­மன்­றம் அவரை விடு­வித்­தது.

கடந்த 2014ல் அந்த ஆட­வருக்கு 12 அல்­லது 13 வய­தான போது அந்த பாலி­யல் வன்­செ­யல் சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது. அதன்­ தொ­டர்­பில் அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு இருந்­த­தா­கத் தெரி­ய­வந்­தது.

அந்த ஆட­வர் தனக்கு விதிக்­கப்­பட்டு இருக்­கும் 36 மாத நிபந்­தனை எச்­ச­ரிக்கை காலத்­தில் நிபந்­த­னை­களை மீறி­னால் அல்லது மீண்­டும் குற்­றச்செய­லில் ஈடு­பட்­டால் அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­கள் புதுப்­பிக்­கப்­படும் என்று தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­லக பேச்­சா­ளர் கூறினார்.