குடியிருப்பு வட்டாரங்களுக்கு மக்களை ஈர்த்து அவர்கள் அங்கு அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுமாறு ஊக்கமூட்டும் விழா இந்த ஆண்டு பிற்பகுதியில் இரண்டாவது முறையாகத் திட்டமிடப்பட்டு உள்ளது.
மூன்று மாதம் நடந்த அந்த விழா நேற்றுடன் வெற்றிகரமான முறையில் முடிவடைந்தது.
அதைத் தொடர்ந்து மீண்டும் அந்த விழாவை நடத்த திட்டமிடப்படுகிறது.
'குடியிருப்பு வட்டார விழா' என்ற அந்த விழா சென்ற நவம்பரில் தொடங்கப்பட்டது. விழாக்காலத்தில் மக்கள் $330,000 தொகையைச் செலவிட்டனர்.
சில்லறை வர்த்தக வியாபாரிகளுக்கு 20 விழுக்காடு வியாபாரம் கூடியது. அந்த விழாவை முடித்து வைக்க நேற்று நடந்த நிகழ்ச்சியில் வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் கலந்துகொண்டார்.
2020 அக்டோபரில் நகர மைய மின்னிலக்கமயத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து குடியிருப்புப் பகுதிகளில் செயல்படும் கடைகளில் மின்னிலக்க முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் திருவாட்டி லோ கூறினார்.

