குறுக்குத் தீவு வழித்தடம்: 3ஆம் கட்ட கட்டுமான, வடிவமைப்பு பணிகள் 2033ல் நிறைவடைய வாய்ப்பு

2 mins read
0561c3c5-32a5-43ba-ac4f-ed16c1ce344b
-

குறுக்­குத் தீவு வழித்­த­டத்­தின் மூன்றா­வது மற்­றும் கடைசி கட்­டத்­திற்­கான கட்­டு­மான, வடி­வ­மைப்­புப் பணி­கள் 2033ஆம் ஆண்டு இறுதி­யில் முடி­வ­டை­யும் எனத் தெரி­வதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் எட்­டா­வது எம்ஆர்டி வழித்­த­ட­மான, அந்­தத்தட பணி­கள் முடி­வ­டை­வ­தற்­கான காலம் வெளிப்­ப­டை­யாகத் தெரி­ய­வந்திருப்­பது இதுவே முதல்­முறை.

மூன்­றா­வது கட்­டத்­திற்­கான முக்­கிய கட்­டு­மான ஒப்­பந்­த ஏலக்­குத்­த­கை­க­ளைத் தாக்கல் செய்­வதற்­கான அழைப்பு 2024ஆம் ஆண்டின் 3வது காலாண்­டில் இருந்து விடுக்­கப்­படக்­கூ­டும் என்பது ஆவ­ணங்­களில் இருந்து தெரி­ய­வரு­கிறது.

வடி­வ­மைப்புப் பணி­க­ளுக்­கான ஏலக்­குத்­தகை நடை­முறை 2031இன் இரண்­டா­வது காலாண்­டில் தொடங்க வாய்ப்பு இருக்­கிறது.

விவ­ரங்­கள் இன்­ன­மும் இறுதி செய்யப்படவில்லை என்பதால் இந்தக் கால அளவு மாற்­றத்­திற்கு உட்­பட்டது என்று ஏலக்­குத்­தகை ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன.

இருந்­தா­லும் முக்­கி­ய­மான கட்டு­மா­னப் பணி­கள் 2033ஆம் ஆண்டின் 4வது காலாண்டு இறுதியில் முடிக்க திட்­டமுள்­ளது. பல முறை­க­ளை­யும் ரயில் வண்­டி­க­ளை­யும் பரி­சோ­திக்க கால­அ­வ­கா­சம் தேவைப்­படும்.

இவற்றைக் கருத்­தில்­கொண்டு பார்க்­கை­யில் குறுக்­குத் தீவு எம்ஆர்டி வழித்­த­டத்­தின் கடைசிக் கட்­டம் 2034ல் அல்­லது அதற்­குப் பிறகு­தான் செயல்­பாட்­டுக்கு வரும் வாய்ப்பு உள்­ளது. இந்த வழித்­த­டம் மூன்று கட்­டங்­க­ளாக உரு­வாக்­கப்­படு­கிறது.

இது சாங்­கி­யில் இருந்து துவாஸ் வரை அமை­கிறது. முக்­கி­ய­மான மையங்­களை இணைக்­கிறது. முதல் கட்­டம் 29 கி.மீ. நீளம் இருக்­கும். அதில் 12 ரயில் நிலை­யங்­கள் அமைந்து இருக்­கும்.

இரண்­டாம் கட்­டத்­திற்­கான பொறி­யி­யல் ஆய்­வு­கள் இந்த ஆண்டின் பிற்­ப­கு­தி­யில் முடி­வ­டை­யும். 3வது கட்­டம் சுமார் 13 கி.மீ. நீளம் இருக்­கும்.

அதில் குறைந்­த­பட்­சம் நான்கு எம்­ஆர்டி நிலை­யங்­கள் அமைந்து இருக்­கும்.

குறுக்­குத் தீவு வழித்­தடம் மொத்தம் 56 கி.மீ. நீளத்­திற்கு இருக்­கும்.