வரி உயர்வு: சில்லறை வர்த்தக துறையினர் கவலை

வரி உயர்வு: சில்லறை வர்த்தக துறையினர் கவலை

1 mins read
f597b7f2-2379-4ad3-a931-782d6c7d7f33
-

சிங்­கப்­பூ­ரில் ஜிஎஸ்டி வரி உயர்­கிறது. இத­னால் பய­னீட்­டா­ளர்­கள் அதி­கம் செல­வி­ட­மட்­டார்­கள் என்று சில்­லறை வர்த்­த­கத் துறை­யி­னர் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள்.

ஜிஎஸ்டி வரி உயர்வு தங்­களை மிக­வும் பாதித்­து­வி­டும் என்று உணவு, பானத் துறை நிறு­வ­னங்­களும் தெரி­வித்­தன.

எரி­சக்தி, போக்­கு­வ­ரத்து கட்டணங்­களும் அதி­க­ரிக்­கின்­றன.

இத்­த­கைய ஒரு நேரத்­தில் பய­னீட்­டா­ளர்­கள் செலவைக் குறைத்­துக்­கொண்டால் தங்­க­ளுக்குப் பாதிப்பு இருக்­கும் என்று அவர்­கள் கூறு­கி­றார்­கள். சில நிறு­வ­னங்­கள் தங்­க­ளால் சமா­ளித்­து­விட முடி­யும் என்று தெரி­வித்­தன.

குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் செயல்­படும் சிறிய நிறு­வ­னங்­கள், செலவு அள­வுக்கு அதி­க­மா­கக் கூடி­னால் தொழிலை நிறுத்­திக்­கொள்ள வேண்­டிய சூழ்­நிலை ஏற்­ப­டக்­கூ­டும் என்று கூறின.

ஜிஎஸ்டி வரி இப்­போது 7% ஆக இருக்­கிறது. இது அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி 1% அதி­கரிக்­கும். பிறகு 2024 ஜன­வரி 1ஆம் தேதி மேலும் 1% அதி­க­ரிக்­கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.