பசுமைத் திட்டங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கது. என்னைப் போன்ற மாணவர்களுக்கு இத்துறை
சார்ந்த புதிய வேலைவாய்ப்புகளை இது ஏற்படுத்தித் தரும். கரிம வரி அதிகரிப்பு பன்மடங்காகும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. பயனீட்டுச் செலவுகள் இதனால் அதிகரிக்கும். இருப்பினும், சிங்கப்பூர் பசுமைப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதற்கு இது ஓர் அறிகுறி.
- ஹரேஷ் பாண்டியன், 25, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம்
மின் ஆற்றல் பொறியியல் துறை இறுதியாண்டு மாணவர்

