நாம் 7 விழுக்காடு பொருள், சேவை வரியுடன் வாழ்ந்திருக்கிறோம். பொருள், சேவை வரி உயர்த்தப்பட்டாலும் சம்பளத்திலும் வரவிலும் மாற்றம் இல்லை. விலைவாசி ஏறும்போது வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கிறது. இரண்டிற்கும் சமநிலை அவசியம். ஒரு கட்டடத்தை வடிவமைக்கும்போது நீடித்த நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நம்புபவன் நான். எனவே, சுற்றுச்சூழலைக் கருதி வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது பாராட்டிற்குரியது.
- நவின்குமார் பழனி, 23, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக்
கட்டடக்கலைத் துறை மாணவர்

