அமைச்சர் வோங்: ஓமிக்ரானை எதிர்கொள்வதில் முழு நம்பிக்கை

அமைச்சர் வோங்: ஓமிக்ரானை எதிர்கொள்வதில் முழு நம்பிக்கை

1 mins read
3b01451a-c613-4a8e-bc93-16ef9ed140ca
-

தடுப்­பூ­சி­கள், கூடு­தல் தடுப்­பூ­சி­கள், நோய்த் தீர்­வி­யல் - இம்­மூன்­றும்­தான் கொவிட்-19 கிரு­மி­யை­யும் அதன் திரி­பு­க­ளை­யும் எதிர்­கொள்­வ­தில் சிங்­கப்­பூ­ரின் உத்தி என்று நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

புதிய திரி­பு­கள் தோன்­றி­னா­லும் இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­பு­வ­தில் சிங்­கப்­பூ­ரின் இவ்­வுத்தி புதிய பாதையை வகுத்­துக்­கொடுக்­கும் என்று திரு வோங் கூறி­யுள்­ளார்.

அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தா­லும் பெரும்­பா­லான கொரோனா நோயா­ளி­களி­டம் இலே­சான அறி­கு­றி­கள் காணப்­ப­டு­வ­தா­லும், இப்­போ­தைய ஓமிக்­ரான் கொரோனா அலையை எதிர்­கொள்­வ­தில் சிங்­கப்­பூர் முழு நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார். சிஎன்­பிசி ஊட­கத்­திற்கு அளித்த நேர்­கா­ண­லின்­போது அமைச்­சர் வோங் இவ்­வாறு தெரி­வித்­தார்.

இப்­போ­தைக்­குத் தொற்று பாதிப்பு சாதனை அள­வில் இருக்­கும் வேளை­யில், அது நாளொன்­றுக்கு 20,000க்கு­மேல் போக­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

ஆயி­னும், தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் நிலைமை கட்­டுக்­குள் இருப்­ப­தாக திரு வோங் குறிப்­பிட்­டார்.

பரா­ம­ரிப்பு தேவைப்­படும் கொவிட்-19 நோயா­ளி­கள் இன்­னும் இருப்­ப­தால் மருத்­து­வ­ம­னை­களும் தனி­யார் மருந்­த­கங்­களும் பர­ப­ரப்­பாக இயங்குவதா­கக் கூறிய அவர், ஆனா­லும் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் நிலைமை மோச­மாக உள்ள நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதிக அள­வில் இல்­லா­தது நல்ல விஷ­யம் என்­றும் சொன்­னார்.

நான்­கா­வது தடுப்­பூசி தேவைப்­ப­டுமா என்­பது குறித்து அறி­வி­ய­லா­ளர்­க­ளு­டன் இணைந்து இன்னும் ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அமைச்­சர் வோங் கூறி­னார்.