சிங்கப்பூரின் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு எம்ஆர்டி ரயில் பாதைகளில் கூடியவிரைவில் 106 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அதில் முதல் கட்டமாக இரண்டு ரயில்கள் சிங்கப்பூரை வந்தடைந்துள்ளதாக நிலப் போக்குவரவு ஆணையம் தெரிவித்தது.
ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டு, சீனாவில் உற்பத்திசெய்யப்பட்ட இந்த ரயில்கள், சேவைக்கு அறிமுகப்படுவதற்கு முன் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
இந்த ரயில்களில் சக்கர நாற்காலிகளுக்கு அதிக இடம் உள்ளிட்ட பல புதிய வசதிகளும், அம்சங்களும் இருக்கும் என ஆணையம் கூறியது.
இந்த ஆண்டிலிருந்து 2026ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் புதிய ரயில்கள் பயணிகளின் சேவைக்கு விடப்படும்.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு எம்ஆர்டி ரயில் பாதைகளில் தற்போது இயங்கிவரும் ரயில்கள் கட்டங்கட்டமாக சேவையிலிருந்து நீக்கப்படும்.