தமிழ்மொழித் திறனை வளர்ப்பதிலும் தமிழாசிரியர் ஆவதிலும் பேரார்வம்

தமிழ்மொழித் திறனை வளர்ப்பதிலும் தமிழாசிரியர் ஆவதிலும் பேரார்வம்

2 mins read
3f8494d1-7c13-4759-8462-7b7b407ce7d3
தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் நந்தினி சிவகுமார். அருகில் தமிழ் ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 60. படம்: திமத்தி டேவிட் -

கி.ஜனார்த்தனன்

தொடக்­கக் கல்­லூரி நிலை­யில் 'எச்3' எனப்­படும் 'உயர்­த­ர மூன்று' நிலை­யில் இது­வரை பயின்ற வெகுசில மாண­வர்­க­ளில் ஒரு வராகவும் கடந்த ஆண்டு தேர்­வின்­போது அந்­நி­லை­யில் தமிழ் பயின்ற ஒரே மாண­வி­யு­மாகத் திகழ்­கி­றார் நந்­தினி சிவகு­மார், 18.

ஆண்­டர்­சன் சிராங்கூன் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயின்ற நந்­தினி, முத­லாம் ஆண்­டி­றுதித் தேர்­வின் முடி­வு­க­ளுக்­குப் பிறகு தமது தமிழ்த்­தி­றனை அடுத்த நிலை­யில் சோதிக்க விரும்­பியே 'எச்3' தமிழ்ப்­பா­டத்தை தேர்ந்­தெ­டுத்து அதன் முடிவை, மற்ற பாடங்­க­ளு­டன் நேற்று பெற்­றுக்­கொண்­டார்.

'எச்3' நிலை­யில் எந்­தப் பாடத்­தைத் தெரிவுசெய்­தா­லும் முத­லாம் ஆண்­டி­று­தித் தேர்­வில் சிறந்த மதிப்­பெண்­க­ளைப் பெற்­றி­ருக்­க­வேண்­டும்.

பொரு­ளி­யல், நில­வி­யல், தமிழ் ஆகிய பாடங்­களை 'எச்2' நிலை­யி­லும் உயி­ரி­யல், பொதுத்­தாள் ஆகிய பாடங்­களை 'எச்1' நிலை­யி­லும் படித்த நந்­தினி, இவற்­றில் சிறந்த மதிப்­பெண்­க­ளைப் பெற்று தமது தொடக்­கக் கல்­லூ­ரி­யின் இரண்­டாம் ஆண்­டில் 'எச்3' பாடத்­தைப் பயின்­றார்.

சில பாடங்­க­ளின் மதிப்­பெண்­கள் தாம் விரும்­பிய அள­வுக்கு இல்­லா­விட்­டா­லும் தேர்வு எழு­திய அனு­ப­வமே ஆகமொத்­த­த்தில் கற்­றல் அனு­ப­வ­மாக இருந்­த­தாக இவர் கூறி­னார்.

"நான் எவ்­வ­ளவு கற்­றேன் என்­பதை மட்­டும் இந்த மதிப்­பெண்­கள் காட்­டு­கின்­றன," என்றார் நந்தினி.

'எச்1' தமிழ்ப்­பா­டம், மாண­வர்­

க­ளின் மொழி பயன்­பாட்­டுத் திற­னைச் சோதிக்­கும். 'எச்2' தமிழ்ப்­பா­டம் மொழித்­தி­ற­னு­டன் இலக்­கி­யத் திற­னைச் சோதிக்­கும்.

'எச்3', இந்த இரண்டு திறன்­

க­ளு­டன் கூடு­த­லாக, பாடத்­திட்­டத்­தில் பரிந்­து­ரைக்­கப்­ப­டாத கவி­தை­கள், சிறு­க­தை­கள், உரை­ந­டைப்­ப­கு­தி­கள் ஆகி­ய­வற்றை ஆழ்ந்து படித்­து­ணர்ந்து அவற்­றைத் திறனாய்வு நோக்­கில் கருத்­து­களை எழு­தும் அங்­க­மும் இடம்­பெ­று­கின்­றன.

சிறு வயது முதல் தமிழ்ப்­புத்­த­கங்­க­ளை­யும் சிறு­க­தை­க­ளை­யும் விரும்­பிப் படிக்­கும் நந்­தினி, தமிழ் ஆசி­ரி­யர் ஆக வேண்­டும் என்ற குறிக்­கோ­ளைக் கொண்­டுள்­ளார்.

"என் ஆசி­ரி­யர் திரு வீர­முத்து கணே­ச­னின் ஊக்­கு­விப்­பால் துணிச்சலு­டன் பாடத்­தைச் செய்­தி­ருந்­தேன்," என்று அவர் கூறி­னார்.

தொடக்­கத்­தில் இருந்த மொழிப்­பி­ழை­க­ளைக் களைய தமது ஆசி­ரி­யர் வெகு­வாக கைகொ­டுத்­த­தா­கக் குறிப்­பிட்ட நந்­தினி, அவ­ரி­டம் வாரத்­திற்கு ஒரு முறை­யா­வது ஆலோசனை பெற்­ற­தா­கக் கூறி­னார்.

"நந்­தினி தமிழ் ஆர்­வம் உள்ள மாணவி. அத்­து­டன் கடின உழைப்­பா­ளி­யா­க­வும் தலை­மைத்­துவப் பண்­பு­களும் நிறைந்­த­வர்," என்று வழி­காட்டு ஆசி­ரி­ய­ரான திரு கணே­சன், 60, தெரி­வித்­தார்.

பல்­வேறு காலங்­க­ளை­யும் நாடு­க­ளை­யும் சேர்ந்த தமிழ் இலக்­கி­யப் படைப்­பு­க­ளின் கருத்­து­களை புத்­த­கங்­க­ளாக மட்­டு­மின்றி இசை, நாட­கம், கலந்­து­ரை­யா­டல்­கள் மூல­மா­க ஆர்வத்துடன் இந்த மாணவி கற்றதாக ஆசிரியர் கூறினார்.