மருத்துவமனையில் அதிக கொவிட்-19 நோயாளிகள்

மருத்துவமனையில் அதிக கொவிட்-19 நோயாளிகள்

1 mins read
b193aad7-23f3-47b5-a2c6-a40d9ec5c5b8
-

திங்­கள்­கி­ழமை நள்­ளி­ரவு நிலவரப்­படி சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 1,606க்கு அதி­க­ரித்­தது.

ஞாயிற்­றுக்­கி­ழமை அந்த எண்­ணிக்கை 1,523ஆக இருந்­தது என சுகா­தார அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து 17வது நாளாக ஆயி­ரத்­தைத் தாண்டி தொடர்ந்­தது.

1,606 நோயா­ளி­களில் 44 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்­ள­னர். ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யைக் காட்­டி­லும் ஐவர் கூடு­த­லாக இந்­தப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

மொத்த நோயா­ளி­களில் உயிர்­வாயு உதவி தேவைப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை 198.

மருத்­து­வ­ம­னை­களில் அனு

­ம­திக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­போ­தி­லும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை இறங்கி வரு­கிறது.

ஞாயிற்­றுக்­கி­ழமை 15,283 பேர் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் நேற்று முன்­தி­னம் அந்த எண்­ணிக்கை 13,623ஆகக் குறைந்­தது. ஏழு மர­ணங்­கள் அன்­றைய தினம் பதி­வா­யின.

13,623 நோயா­ளி­களில் 11,519 உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு ஏஆர்டி எனப்­படும் ஆண்­டி­ஜென் விரை­வுப் பரி­சோ­தனை மூலம் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­து.

அவர்­க­ளுக்கு இலே­சான அறி­கு­றி­க­ளு­டன் அல்­லது அறி­குறி இல்­லாத நிலை­யில் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம். இதர 1,957 பேருக்கு பிசி­ஆர் பரி­சோ­தனை மூலம் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த 147 பேரும் திங்­கட்­கி­ழமை எண்­ணிக்­கை­யில் அடங்­கு­வர். அவர்­களில் 99 பேருக்கு பிசி­ஆர் பரி­சோ­தனை மூல­மும் 48 பேருக்கு ஏஆர்டி மூல­மும் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.