'மைக்ரோசாஃப்ட்'டை ஏமாற்றிய இளையர்

'மைக்ரோசாஃப்ட்'டை ஏமாற்றிய இளையர்

2 mins read
f0f5f5e4-5aef-43fc-a2b4-ee308ade2805
-

சிங்­கப்­பூர் இளை­யர் ஒரு­வர், 2017ஆம் ஆண்டு மைக்­ரோ­சா­ஃப்ட் நிறு­வ­னத்தை ஏமாற்றி, $193,000 மதிப்­பிலான 56 மடிக்­க­ணி­னி­களைப் பெற்­ற­தன் தொடர்­பில் நேற்று நான்கு குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார். அந்­நி­று­வ­னத்தை ஏமாற்ற சதித் திட்­டம் தீட்­டி­ய­தாக ஒரு குற்­றச்­சாட்­டும், குற்­ற­வி­யல் நடத்தை மூலம் பெற்ற சொத்­து­களை வைத்­தி­ருந்­தது தொடர்­பில் மூன்று குற்­றச்­சாட்­டு­களும் அவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

குற்­றச் செய­லைச் செய்­த­போது அந்த இளை­ய­ருக்கு வயது 16. சிறார், இளை­யர் சட்­டத்­தின்­கீழ் 18 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளின் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­மாட்­டாது. அத­னால் அவ­ரின் அடை­யா­ளம் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

2017ஆம் ஆண்டு மைக்­ரோ­சாஃப்ட் நிறு­வ­னம் அதன் 'சர்­ஃபேஸ்' மடிக்­க­ணி­னி­க­ளுக்கு ஓர் உத்­த­ர­வா­தத் திட்­டத்தை நடை­முறைப்­படுத்­தி­யது. அமெ­ரிக்­கா­வில் உள்ள நிறு­வ­னங்­கள், பழு­தான மடிக்­க­ணி­னி­க­ளுக்­குப் பதிலாகப் புதிய மடிக்­க­ணி­னி­களை முத­லில் பெற்­றுக்­கொண்ட பிறகு பழு­தா­ன­வற்றை மைக்­ரோ­சா­ஃப்­டி­டம் திருப்­பித் தர அது வகை­செய்­தது. வாடிக்­கை­யா­ளர்­கள் மடிக்­கணினி­யின் தயா­ரிப்பு அடை­யாள எண்­ணைச் சமர்ப்­பிக்கவேண்­டி­யது கட்­டா­யம். அத்­த­கைய எண்­களை இணை­யத்­தில் சுமார் 25 டால­ருக்கு வாங்கமுடியும் என்பதைத் தெரிந்து­கொண்ட இளை­யர், தனது இணைய நண்­ப­ரான ஜஸ்­டின் டேவிட் மே என்ற அமெ­ரிக்­க­ரு­டன் அந்த விவ­ரத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார்.

அதற்குப் பிறகு மே கொடுத்த அமெ­ரிக்க முக­வ­ரிக்­குப் பழு­தா­ன­வற்­றுக்கு மாற்று மடிக்­க­ணி­னி­களை அனுப்­பும்­படி மைக்­ரோ­சா­ஃப்ட் நிறு­வ­னத்­துக்கு விண்­ணப்­பித்­தார். அவற்­றைப் பெற்­றுக்­கொண்ட மே, சிலவற்றைத் தான் வைத்­துக்­கொண்டு மற்­ற­வற்றை இளை­ய­ருக்கு அனுப்­பி­னார். 2018ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் பல்­வேறு குற்­றங்­கள் தொடர்­பில் அமெ­ரிக்­கா­வில் மே மீது குற்­றம் சுமத்தப்பட்டது.

2018ஆம் ஆண்டு மே மாதம், அமெ­ரிக்க மத்­தி­யப் புல­னாய்­வுப் பிரிவு சிங்­கப்­பூர் இளை­ய­ருக்கு மோச­டி­யில் தொடர்பு இருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தாக சிங்­கப்­பூர்க் காவல்­து­றை­யி­டம் தெரி­வித்­தது.

குற்­றம் சுமத்தப்பட்ட இளை­யர் 'கேரோ­ஸல்' மின்-வர்த்­த­கத் தளத்­தின் மூலம் அந்த மடிக்­கணி­னி­களை $1,700 முதல் $2,500 வரை­யி­லான தொகைக்கு விற்­ற­தா­க­வும், கிடைத்த தொகையை 'பிட்­கா­யின்' மின்­னி­லக்­க நாணயத்திற்கு மாற்றி­ மொத்­தப் பணத்­தை­ இழந்­ததாகவும் கூறி­னார்.

அவர் நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்புக்கு உகந்தவரா என்பது தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் 31ஆம் தேதி வெளி­யா­கும். அதன் பிறகே தண்­டனை விதிக்­கப்­படும் என்று மாவட்ட நீதி­பதி தெரி­வித்­தார். ஏமாற்று வேலைக்­கான சதித் திட்­டம் தீட்­டிய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் இளை­ய­ருக்­குப் பத்­தாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

குற்­ற­வி­யல் நடத்தை மூலம் கிடைத்த சொத்து­களை வைத்­தி­ருந்த குற்­றத்­திற்கு, அதி­க­பட்­சம் $500,000 அப­ரா­தத்­து­டன், பத்­தாண்டு சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

$193,000 மதிப்பிலான மடிக்கணினிகளைத் தனக்கு அனுப்ப வைத்த 16 வயது ஆடவர்