தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன, சமயம் சார்ந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவிருக்கும் சுபாஷ்

2 mins read
45775b2e-cf1a-40c6-917d-f85ddc42457a
சுபாஷ் கோவிந்த் பிரபாகர் நாயர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உள்­ளூர் இசைக் கலை­ஞ­ரான சுபாஷ் கோவிந்த் பிரபாகர் நாயர், சம­யங்­கள், இனங்­களுக்கு இடை­யி­லான கசப்­பு­ணர்­வைத் தூண்ட முயன்­ற­தா­கச் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொள்­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. வரும் ஏப்­ரல் மாதம் 29ஆம் தேதி, தன் மீது சுமத்­தப்­பட்ட நான்கு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் மூத்த மாவட்ட நீதி­பதி முன்­னி­லை­யில் அவர் ஒப்புக்­கொள்­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ர­ரான 29 வயது சுபாஷ் நேற்று நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்­கப்­பட்­டார். 2019ஆம் ஆண்டு இன­வா­தக் கருத்­து­க­ளைக் கொண்ட 'ராப்' பாட­லைத் தயா­ரித்து அவர் இணை­யத்­தில் வெளி­யிட்­டார்.

அதன் தொடர்­பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியன்று சுபாஷுக்கு 24 மாதங்­களுக்கு நிபந்­த­னை­யு­டன் கூடிய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. நிபந்­தனை­யில், சுபாஷ் மீண்­டும் தவறு செய்­தால், முன்­னைய குற்­றத்­துக்­கும் தண்­டிக்­கப்­ப­டு­வார் என்­றும், அத்­து­டன் புதிய குற்­றம் தொடர்­பி­லும் தண்­டனை வழங்­கப்­படும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டது.

இருப்­பி­னும், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி­யன்று இன­வெ­றுப்­பைத் தூண்­டும் கருத்து­களை வெளி­யிட்ட சீனக் கிறிஸ்­துவ­ரின் காணொளி குறித்து, சுபாஷ் சமூக ஊட­கங்­களில் கருத்­து­ரைத்­தார்.

அதே­போன்ற வெறுப்­பைத் தூண்­டும் கருத்­து­களை மலாய் முஸ்­லிம்­கள் வெளி­யிட்­டி­ருந்­தால், அதி­கா­ரி­கள் அவர்­களை வேறு வித­மாக நடத்­தி­யி­ருப்­பர் என்று சுபாஷ் கூறி­யி­ருந்­தார்.

மேலும், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி சீனர்­களுக்­கும் இந்­தி­யர்­க­ளுக்­கும் இடையே இனக் கசப்­பு­ணர்­வைத் தூண்­டும் பதி­வை­யும் சுபாஷ் வெளி­யிட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

2019ஆம் ஆண்டு ஆர்ச்­சர்ட் டவர்­ஸில் இந்­திய ஆட­வர் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய சீன ஆட­வ­ருக்கு அவ­ரது இனம் கார­ண­மாக அதி­கா­ரி­கள் சலுகை காட்­டி­ய­தாக சுபாஷ் குறிப்­பிட்­டி­ருந்­தார். அது குறித்த காவல்­துறை விசா­ரணை இடம்­பெற்ற நிலை­யில், சென்ற ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று அந்த சமூக ஊட­கப் பதி­வின் கேலிச் சித்­தி­ரத்தை மேடை நிகழ்ச்சி ஒன்­றில் காட்­சிப்­ப­டுத்­தி­னார்.

இனங்­கள், சம­யங்­க­ளுக்கு இடையே வெறுப்­பைத் தூண்ட முயன்ற ஒவ்­வொரு குற்­றத்­திற்­கும், மூன்று ஆண்டுகள் வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யு­டன் அப­ரா­த­மும் விதிக்க சிங்­கப்­பூர் சட்­டத்­தில் இட­முண்டு.