இவ்வட்டாரத்தின் வர்த்தக மையமாக விளங்கும் சிங்கப்பூரும் தொழில்நுட்ப வளாகமான இந்தியாவும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய மூன்று துறைகளில் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்பந்தத்தில் கை யெழுத்திட்டுள்ளன.
சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அைமச்சும் இந்திய அறிவியல், தொழில்நுட்பப் பிரிவும் கையெழுத்திட்டுள்ள அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கும் அதிக வாய்ப்புகளுக்கும் வழி வகுக்கிறது. இதன்கீழ் இரு நாடுகளும் நவீன பொறியியல், தயாரிப்புத் துறை, எரிசக்தி மற்றும் புதிய தொழில்நுட்பத் துறைகளில் கூட்டுத் திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
மேலும் ஓர் ஒப்பந்தத்தில் இந்திய அறிவியல் தொழில்நுட்பப் பிரிவும் என்டர்பிரைஸ் சிங்கப்பூரும் கையெழுத்திட்டுள்ளன. இது, புதிய புத்தாக்கத் தொழில்நுட்பத்திலும் தீர்வுகளிலும் பங்காளித்துவத்தை மேம்படுத்தி இரு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்திய-சிங்கப்பூர் தொழில்நுட்ப மாநாட்டின் முதல் நாளான நேற்று இரு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த மாநாட்டை இந்திய அரசாங்கம், இந்திய அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு, சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு, இந்திய தொழில் சம்மேளனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. மெய்நிகர் வழியாக நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டில் விண்வெளி தொழில்நுட்பம், விவேக நகரங்கள், நீடித்த போக்குவரத்துக்கான தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில் இருநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான எஸ். ஈஸ்வரன், இரு நாடு களுக்கு இடையிலான வர்த்தகம் 2020ல் 19.8 பில்லியன் டாலரில் இருந்து 35 விழுக்காடு கூடி கடந்த ஆண்டு 26.8 பில்லியன் டாலருக்கு அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டினார். கொவிட்-19 நெருக்கடியிலிருந்து இரு நாடுகளும் மீண்டு வருவதை உடன்பாடுகள் காட்டுவதாகவும் அவர் சொன்னார். மூன்று துறைகளில் இரு நாடுகளும் சேர்ந்து செயல்படலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு, இணையச் செயல்பாடுகள், கட்டு மானம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியன அவை.

