குட்டி பாண்டா உட்பட 900 விலங்குகள் சிங்கப்பூரில் பிறந்தன

குட்டி பாண்டா உட்பட 900 விலங்குகள் சிங்கப்பூரில் பிறந்தன

2 mins read
049707b2-e87a-4bf0-b4b7-465b55be46da
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த 'லே லே' பாண்டா குட்டி அனை­வ­ரை­யும் வியப்­பில் ஆழ்த்­தி­யது.

ஆனால் இந்­தப் பாண்டா குட்டி மட்­டுமே சிங்­கப்­பூ­ரில் பிறக்­க­வில்லை. சிங்­கப்­பூ­ரில் உள்ள நான்கு வன­வி­லங்கு பூங்­கா­வி­ல் 2021ஆம் ஆண்டில் மொத்­தம் 900 புதிய விலங்­கி­னங்­கள் பிறந்­துள்­ளன. மண்­டாய் வன­வி­லங்கு குழு­மம் நேற்று ெவளி­யிட்ட அறிக்­கை­யில் இத­னைத் தெரி­வித்­தது.

முட்­டை போட்டு குஞ்சு பொரிக்­கும் 160 உயி­ரி­னங்­களும் அனைத்­து­லக இயற்­கைப் பாது­காப்பு சங்­கம் பட்­டி­ய­லிட்­டுள்ள அருகி வரும் உயி­ரி­னங்­களில் 44 உயி­ரி­னங்­களும் சிங்­கப்­பூ­ரில் பிறந்­துள்­ள­தாக அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

முன்பு சிங்­கப்­பூர் வன­வி­லங்கு காப்­ப­கம் என்று அழைக்­கப்­பட்ட தற்­போ­தைய மண்­டாய் வன­வி­லங்கு காப்­ப­கம் (எம்­ட­பிள்­யூஜி), சிங்­கப்­பூ­ரில் உள்ள விலங்­கி­யல் தோட்­டம், நைட் சஃபாரி, ஜூரோங் பற­வைப் பூங்கா, ரிவர் வொண்­டர்ஸ் ஆகி­ய­வற்றை நிர்­வ­கித்து வரு­கிறது.

விலங்­குப் பரா­ம­ரிப்பு குழு­வி­ன­ரின் கடின உழைப்பு, அர்ப்­ப­ணிப்பு மற்­றும் காப்­ப­கத்­தின் இனப்­பெ­ருக்க முயற்சி ஆகி­ய­வற்­றின் பய­னாக ரிவர் வொண்­டர்ஸ் பூங்­கா­வில் லே லே பிறந்­தது.

சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தி­லும் புதிய வர­வு­கள் இருந்­தன. செப்­டம்­ப­ரில் இரண்டு 'கிரேவி' ரக வரிக்­கு­திரை குட்­டி, நான்கு ஆப்பி­ரிக்க நாய் குட்­டி­கள் அங்கு பிறந்­தன.

வரிக்­கு­திரை குட்­டி­, ஐரோப்­பிய விலங்­கி­யல் பூங்கா மற்­றும் மீன்­வ­ளர்ப்பு சங்­கம் நிர்­வ­கிக்­கும் திட்­டத்­தின் மூலம் பிறந்­தவை. ஆப்பி­ரிக்க நாய் பல கண்­டங்­களில் பரவி­யி­ருந்­தா­லும் தற்­போது அழிந்து வரு­கின்­றன.

விலங்­கி­யல் தோட்­டத்­தில் உள்ள ரெப்­டோப்­பிய பிரி­வில் 70க்கும் மேற் ­பட்ட அழிந்து வரும் தங்க மண்­டெல்லா தவ­ளை­கள் முட்­டை­க­ளைப் பொரித்­துள்­ளன. ஒரு ஜோடி சகி­ஷிமா புல்­வெளி பல்­லி­களும் தெற்கு ஆசி­யா­வில் அழிந்­து­வ­ரும் 'மலா­யன் பாக்ஸ்' என்று அழைக்­கப்­படும் மூன்று ஆமை­களும் சிங்­கப்­பூ­ரில் பிறந்­துள்­ளன.

தனிச்­சி­றப்­பு­மிக்க 'ஃபால்ஸ் காரி­யல்' எனக் குறிப்­பி­டப்­படும் முத­லை­களை இனப்ெ­ப­ருக்­கம் செய்­வ­தில் சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம் முதல் முறை­யாக வெற்றி கண்­டுள்­ளது.

இந்த வகை முத­லை­கள் குறிப்­பிட்ட தட்­ப­வெப்­பத்­தில் மட்­டுமே இனப்ெ­ப­ருக்­கம் ெசய்­யக்­கூ­டி­யவை.

சென்ற கிறிஸ்­மஸ் நாளை, நைட் சஃபாரி புதிய வர­வு­டன் கொண்­டா­டி மகிழ்ந்தது.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் அருகி வரும் இன­மான 'சண்டா ஸ்ேலா லோரிஸ்' எனும் மரத்­தில் வாழும் உயி­ரி­னம் பிறந்­தது. இந்த வகை விலங்­கு­க­ளுக்கு நோய்­களை குணப்­ப­டுத்­தும் சக்தி இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­வ­தால் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கடத்­தப்­பட்டு அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. நைட் சஃபாரி­யில் முதல் முறை­யாக இரண்டு 'மாஸ்க் சிவட்' குட்­டி­களும் பிறந்­துள்­ளன. உல­கி­லேயே சிங்­கப்­பூ­ரில் உள்ள ஜூரோங் பற­வைப் பூங்­கா­வில்­தான் மூன்று வகை­யான பறவை இனங்­கள் குடி­கொண்­டுள்­ளன. 'நீக்­ரோஸ் பிளீ­டிங்-ஹார்ட்' புறா, 'ஸ்ட்ரா-ஹெட்­டட்' கிளி, நீல நிற கண்­க­ளைக் கொண்ட கிளி ஆகி­யவை வசிப்­ப­தாக அறிக்கை தெரி­வித்­தது.