உக்ரேன் விவகாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அந்நாட்டில் உள்ள இரண்டு வட்டாரங்களை நாடுகளாக அங்கீகரித்துள்ள ரஷ்யா அங்கு படைகளையும் அனுப்பியுள்ளது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தடை விதிக்கப்போவதாக எச்சரித்தும் உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்துள்ளது.
இதையடுத்து ரஷ்யாவின் தற்காப்பு, வங்கி மற்றும் நிதித்துறைகளுக்கு மேற்கத்திய நாடுககள் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. உக்ரேன் நெருக்கடியால் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய உச்சமாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை ேநற்று 100 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. உக்ரேன் நிலவரம் மேலும் மோச மடைந்தால் எண்ணெய் விலையும் மோசமடையும். இதனால் விலைவாசி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உக்ரேன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று சிங்கப்பூர் வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரர்களை நான்கு வழிகளில் உக்ரேன் பிரச்சினை பாதிக்கலாம் என கூறப் படுகிறது.
உணவு விலை அதிகரிப்பு அவற்றில் ஒன்று. உக்ரேன் விவகாரத்தால் கோதுமை, சோளம் போன்றவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உக்ரேன், உலகின் மூன்றாவது பெரிய சோள ஏற்றுமதியாளராகவும் நான்காவது பெரிய கோதுமை ஏற்றுமதியாளராகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில் கோதுமையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக ரஷ்யா உள்ளது.
இதனால் இவ்வட்டார உணவு விநியோகம் பாதிக்கப்பட்டு 2021ல் 28 விழுக்காடு கூடி புதிய உச்சத்தைத் தொட்ட உணவு விலைகள் மேலும் அதிகரிக்கலாம். அடுத்ததாக மின்சார விலையும் அதிகரிக்கக்கூடும். உக்ரேன் வழியாகச் செல்லும் ரஷ்யாவின் எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் பெரிதும் நம்பியுள்ளன. இதன் மூலம் ஐரோப்பாவுக்கு 40 விழுக்காடு இயற்கை எரிவாயுவை ரஷ்யா விநியோகித்து வருகிறது. இதன் காரணமாக உலகின் எரிசக்தி சந்தையும் பாதிக்கப்படலாம். மின்சார உற்பத்திக்கு இயற்கை எரிவாயுைவ நம்பியிருக்கும் சிங்கப்பூரும் உலகச் சந்தையில் எரிவாயு விலை ஏற்றத்தால் பாதிக்கப்படும்.
மூன்றாவதாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம். ரஷ்யாவின் எண்ணெய்யை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும். சவூதி அரேபியாவுக்கு அடுத்ததாக ரஷ்யா அதிகளவு எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது. நாளுக்கு ஐந்து பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷ்யா ஏற்றுமதி செய்கிறது. இதனால் உக்ரேன் விவகாரம் எண்ணெய் விலையிலும் எதிரொலிக்கும். நான்காவதாக விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு பொருள் விலைகள் அதிகரிக்கக்கூடும்.

