தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்வழி 'விடிஎல்': பாத்தாம் தீவுக்குச் சென்ற சிங்கப்பூரர்கள்

1 mins read
b1ce443c-a5a3-442e-974d-35fefbcaa546
இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகள் சிங்கப்பூரர்களுக்காக மீண்டும் திறந்துவிடப்படவுள்ளன. (படம்: சின் மின் நாளிதழ்) -

கடல்வழி 'விடிஎல்' திட்டத்தின் வழி, 28 சிங்கப்பூரர்கள் பாத்தாம் தீவைச் சென்றடைந்ததுள்ளனர்.

ஈராண்டுகளுக்குப் பிறகு, பாத்தாம் தீவைச் சென்றடைந்த முதல் அனைத்துலகப் பயணிகள் இவர்கள்.

பயணிகளை வரவேற்ற ரியாவ் தீவுகளின் ஆளுநர், இந்தத் தருணத்திற்காக வெகுநாளாகக் காத்திருந்ததாகக் கூறினார்.

திட்டத்தின் கீழ் முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக்கொண்ட சிங்கப்பூர்ப் பயணிகள் தங்களைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள தேவை­யின்றி பாத்­தா­முக்­கும் பிந்­தா­னுக்­கும் சென்றுவரலாம்.