தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செய்திக்கொத்து

3 mins read
b8997f1c-689d-46e3-9f30-0d12fdcac839
-

அரசாங்க அதிகாரிகளை அடித்தவருக்குச் சிறை

தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உணவங்காடியில் அமர்ந்ததுடன் தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகளை அடித்த ஆடவருக்கு 26 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரெட்ஹில் உணவங்காடி ஒன்றின் நுழைவாயிலில் வருகையாளரின் டிரேஸ்டுகெதர் பதிவைக் கண்காணிக்கும் பணியாளரிடம் 54 வயது சுவா சூன் ஹியென் தன்னிடம் 'சேஃப்என்ட்ரி' கருவி இல்லை என்று பொய் சொல்லியிருக்கிறார். உணவை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பப்போவதாகவும் அவர் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு உணவங்காடி நாற்காலியில் தனது காதலியுடன் அமர்ந்து முகக்கவசம் அணியாமல் சுவா பேசியிருக்கிறார். இதை அறிந்த தேசிய சுற்றுப்புற அமைப்பு அதிகாரிகளை சுவா அடித்தார்.

சிங்கப்பூரரான சுவா குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

வசதி குறைந்தோருக்கான உணவு ஏற்பாடு வசதி நீட்டிப்பு

வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உணவு வழங்க 'தி ஃபூட் பேங்க்'குடன் 'கோல்ட் ஸ்டோ­ரேஜ்' பேரங்­காடி இணைந்து செயல்­பட்டு வந்­துள்­ளது. இந்த ஏற்­பாடு விரி­வு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக 'கோல்ட் ஸ்டா­ரேஜ்' தெரி­வித்­துள்­ளது.

2020ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட 'பெட்­டர் டுகெ­தர்' எனும் ஒன்­றாக மேம்­ப­டு­வோம் திட்­டத்­தின்­கீழ் 'கோல்ட் ஸ்டா­ரேஜ்', எளி­தில் கெட்­டுப்­போகாத உணவு வகை­களை 'தி ஃபூட் பேங்க்' உணவு நன்­கொடை அமைப்­புக்கு வழங்கி வரு­கிறது. டின்களில் பாது­காக்­கப்­படும் உணவு, அரிசி, பால் மாவு உள்­ளிட்ட உணவு வகை­களை 'கோல்ட் ஸ்டோ­ரேஜ்' 'தி ஃபூட் பேங்க்'கிற்கு வழங்­கும்.

'தி ஃபூட் பேங்க்'கின் முயற்சி­க­ளால் 300,000 பேர் பல­ன­டை­கின்­ற­னர். குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த பிள்­ளை­களும் இதனால் பலனடைவோரில் அடங்குவர். உதவித் திட்டத்தின் விரிவாக்கத்தின் மூலம் செங்காங் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்­தோருக்கு உணவு வழங்­கப்­படும். பழங்­கள், காய்­க­றி­கள் உள்­ளிட்­டவை அவர்­க­ளுக்கு வழங்­கப்­படவுள்ள உணவுப் பொரு­ள்­களில் அடங்­கும்.

சிங்கப்பூரில் முதலீடு செய்யவுள்ள மறுபயனீட்டு எரிசக்தி நிறுவனம்

உல­கின் நான்­கா­வது ஆகப் பெரிய மறு­ப­ய­னீட்டு எரி­சக்தி தயா­ரிப்பு நிறு­வ­ன­மான 'இடி­பி­ஆர்' எனும் 'இடிபி ரினி­யூ­வ­பல்ஸ்' நிறு­வ­னம், 2030ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூ­ரில்

10 பில்­லி­யன் வெள்ளி முத­லீடு செய்­யத் திட்­ட­மிட்­டுள்­ளது. ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­துக்­கான தலை­மை­ய­கத்தை சிங்­கப்­பூரில் அமைப்­பது போர்ச்­சு­கீ­சிய நிறு­வ­ன­மான 'இடி­பி­ஆர்'ரின் இலக்கு.

சிங்­கப்­பூ­ரின் மறு­ப­ய­னீட்டு நிறு­வ­ன­மான 'சன்­சீப்'பின் 91 விழுக்­காடு பங்­கு­க­ளை­யும் 'இடி­பி­ஆர்' வாங்­கி­யுள்­ளது. அந்­நி­று­வ­னம் வட்­டார அள­வில் தனது முத­லீ­டு­களை அதி­க­ரிக்க எண்­ணம் கொண்­டுள்­ளது. 'சன்­சீப்' நிறு­வ­னத்­தின் பெரும்பான்மை பங்­கு­களை 'இடி­பி­ஆர்' வாங்­கு­வது குறித்து சென்ற ஆண்டு நவம்­பர் மாதம் முத­லில் அறி­விக்­கப்­பட்­டது. 'சன்சீப்'பின் பல மறு­ப­ய­னீட்டு எரி­சக்­தித் திட்­டங்­களை இனி 'இடி­பி­ஆர்' ஏற்று நடத்­தும்.

கொவிட்-19 கிருமித்தொற்று

சம்பவங்கள் குறைந்தன

சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 20,312 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த செவ்வாய்க்கிழமையன்று பதிவானதைவிட மிகவும் குறைவு.

கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் மொத்தம் 1,587 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த செவ்வாய்க்கிழமை பதிவானதைவிட குறைவு. தீவிர சிகிச்சைப் பிரிவில் 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 200 நோயாளிகளுக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்படுகிறது.

உள்ளூரில் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் 17,267 பேருக்கு 'ஏஆர்டி' பரிசோதனையின் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இவர்கள் மோசமாக நோய்வாய்ப்படாதவர்கள். 2,885 பேருக்கு 'பிசிஆர்' பரிசோதனையின் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.