பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுக் கண்காணிப்புக் குழு தொடக்கம்

பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுக் கண்காணிப்புக் குழு தொடக்கம்

1 mins read
c350aebe-6a97-43fd-979b-cbb95b2cac87
-

சிங்­கப்­பூர் காவல்­து­றை­யும் சிங்­கப்­பூர் போக்­கு­வ­ரத்­துச் சங்­க­மும் இணைந்து பயங்­க­ர­வாத மிரட்­டல், வாக­னங்­களை ஈடு­ப­டுத்­திக் குற்­றச் செயல்­களில் ஈடு­ப­டு­ப­டு­வது ஆகி­ய­வற்­றைக் கண்­கா­ணிக்­கும் குழு ஒன்­றைத் தொடங்­கி­யுள்­ளன. நேற்று தொடங்­கப்­பட்ட இக்­குழு, போக்­கு­வ­ரத்­துத் துறை­யி­ன­ருக்­குப் பாது­காப்பு மிரட்­டல்­கள் பற்­றிய மேம்­பட்ட புரி­தலை ஏற்­ப­டுத்த உதவும்.

மிரட்­டல்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டால் எச்­ச­ரிக்கை விடுப்­பது, சம்­பவ இடத்­தில் நேரில் கள­மி­றங்­கிச் செய­லாற்­று­வது போன்­ற­வற்­றிற்­கும் இக்­குழு கைகொ­டுக்­கும்.

அண்மைய ஆண்­டு­களில் பிரான்ஸ், அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களில் பயங்­க­ர­வா­தி­கள் வாக­னத்தை ஓட்­டி­வந்து தாக்­கு­த­லில் ஈடு­பட்­ட­தைக் கருத்­தில்­கொண்டு, இக்­குழு அமைக்­கப்­பட்­ட­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது. 2001ஆம் ஆண்டு ஜமா இஸ்­லா­மியா அமைப்பு சிங்­கப்­பூ­ரில் நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்த அத்­த­கைய தற்­கொ­லைத் தாக்­கு­தல் முயற்­சி­கள் முறி­ய­டிக்­கப்­பட்­டதை குழு சுட்­டி­யது.

நேற்று மெய்­நி­கர் வாயி­லாக நடந்த தொடக்க நிகழ்ச்­சி­யில் உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் கலந்­து­கொண்­டார். 2015லிருந்து பயங்­க­ர­வா­தத் தொடர்­பு­டைய நடத்­தைக்­காக 54 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார். காவல்­துறை ஏற்­கெ­னவே மற்ற சில துறை­களுக்­கான கண்­கா­ணிப்­புக் குழுக்­களை அமைத்­துள்­ளது.