உள்துறைக் குழுவின் 924 அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சு ேதசிய தின விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டும் மெய்நிகராக நடத்தப்பட்டது. அதிகாரிகளின் பங்களிப்பிற்கும் சேவைக்கும் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது இதன் நோக்கம்.
சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உள்துறைக் குழு எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பேசினார்.
"நமது அமைப்புகளின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக ஆக்கும் முயற்சிகளை ஒருசிலர் எடுப்பது குறித்தும் அதை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது பற்றியும் முன்பு நான் பேசியிருக்கிறேன்," என்று திரு சண்முகம் கூறினார்.
"இதுவரை நாம் அதை வெற்றி கரமாகக் கையாண்டுள்ளோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

