கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத ஒருவர், தனது 'டிரேஸ்டுகெதர்' செயலி மற்றும் தடுப்பூசித் தகுதிநிலையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததற்காக மலேசியரான 37 வயது கிரண் சிங் ரக்பிர் சிங் (படம்) என்பவருக்கு நேற்று ஐந்து நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
செந்தோசாவில் உள்ள ஒரு மதுக்கூடத்திற்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதியன்று தனது காதலியுடனும் பணி ஓய்வுபெற்ற உதயகுமார் நல்லதம்பி என்பவருடனும் சிங் சென்றபோது, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத உதயகுமாரை மதுக்கூட ஊழியர் அனுமதிக்கவில்லை.
இதனால், அருகில் உள்ள வேறு மதுக்கூடத்திற்குச் செல்லத் தனது தடுப்பூசித் தகுதிநிலையைப் பயன்படுத்திக்கொள்ள சிங் உதவியதை முன்னதாக ஒப்புக்கொண்டிருந்தார்.

