எம்பிளாய்மண்ட் (EP), எஸ்-பாஸ்(S Pass) குறைந்தபட்ச சம்பளம் 3 ஆண்டுகளில் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது

எம்பிளாய்மண்ட் (EP), எஸ்-பாஸ்(S Pass) குறைந்தபட்ச சம்பளம் 3 ஆண்டுகளில் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது

2 mins read
0a20bcb5-8c2a-4ef7-a380-f16f8f3bfb91
-

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள் அவர்களது குறைந்த பட்ச சம்பளத்தை மீண்டும் உயர்த்தும் சூழ்நிலையை எதிர்நோக்குகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த குறைந்த பட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 18ஆம் தேதி நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூர் வரவு செலவு திட்ட அறிக்கையை வெளிட்டார். அதில் அறிவித்த மாற்றங்களின்படி தகுதி பெறும் சம்பளம் $500 வரை உயரக்கூடும்.

புதிய எஸ் பாஸ் விண்ணப்பங்களுக்கு தகுதி பெறும் குறைந்த பட்ச ஊதியம் தற்போது இருக்கும் $2,500லிருந்து $3,000க்கு உயர்த்தப்படும். இந்த மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் அமலாக்கப்படும்.

நிதித்துறைக்கு இந்த தகுதி பெறும் குறைந்த பட்ச ஊதியம் இன்னும் கூடுதலாக $3,500 ஆக நிர்ணயிக்கப்படும். வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­தும் முத­லாளிகள், அத்­த­கைய ஊழியர்க­ளுக்கு விரை­வில் குறைந்­த­ பட்­சமாக அதிக சம்­ப­ளத்தைக் கொடுக்க வேண்டியிருக்­கும்.

புதிய எம்­பி­ளாய்­மண்ட் பாஸ் விண்­ணப்­பங்­க­ளுக்­குத் தகுதி பெற குறைந்­த­பட்ச சம்­ப­ளம் இவ்வாண்டு செப்­டம்­பர் முதல் $5,000ஆக உய­ரும். இப்­போது இந்­தச் சம்­ப­ளம் $4,500ஆக இருக்­கிறது.

நிதிச் சேவைத் துறை­க­ளைப் பொறுத்­த­வரை இந்­தக் குறைந்­த­பட்ச சம்­பள அளவு $5,000லிருந்து $5,500ஆகக் கூடும். ஆற்­றல் மிகுந்த, பொருத்­த­மா­ன­வர்­கள் எம்­பி­ளாய்மண்ட் பாஸ் அனு­ம­தி­யைப் பெறு­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் அப்­போ­தைக்கு அப்­போது அவர்க­ளுக்­கான தொடக்க சம்­ப­ளம் சரி­செய்­யப்­ப­டு­கிறது.

இந்த மாற்றங்களால் சிங்கப்பூருக்கு சரியான, திறமையான வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்க முடியும் என்றும் இது நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்குக் கூடுதல் நேரம் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

எம்­பி­ளாய்மண்ட் பாஸ் விண்­ணப்­பங்­களை மதிப்­பி­டும் முறை­யும் சீர­மைக்­கப்­படும்

குறைந்­த­பட்ச சம்­ப­ளம் ஒரு­பு­றம் இருக்க, எம்­பி­ளாய்மண்ட் பாஸ் விண்­ணப்­பங்­களை மதிப்­பி­டும் முறை­யும் சீர­மைக்­கப்­படும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார். சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டத்­தில் முத­லீடு செய்­யும் அதே­ வே­ளை­யில், நாம் தொடர்ந்து திறந்த நிலை­யில் இருந்து, உல­கம் முழு­வ­தி­லும் இருந்து ஆற்­றல்­மிக்­க­வர்­க­ளை ஈர்க்க வேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை அதி­கம் சார்ந்­தி­ருக்­கும் கட்­டு­மா­னம், பத­னீட்டு தொழில்­து­றை­க­ளுக்­கான 'ஒர்க்­பர்­மிட்' கொள்­கை­கள் சரி­செய்­யப்­படும். எடுத்­துக்­காட்­டாக 2024 ஜன­வரி­யில் இருந்து சார்ந்­தி­ருப்­போர் விகித வரம்பு அல்­லது ஒரு நிறு­வ­னம் நிய­மிக்­கக்­கூ­டிய வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வரம்பு 87.5%லிருந்து 83.3%ஆகக் குறைக்­கப்­படும்.

மனி­த­வள அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தின்­போது பல்­வேறு வெளி­நாட்டு ஊழி­யர் கொள்கை மாற்­றங்­கள் பற்­றிய மேல்­வி­வ­ரங்­கள் அறி­விக்­கப்­படும்.

நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புத் தகவல்கள் தமிழ் முரசு இணையப்பக்கத்தில்...: https://www.tamilmurasu.com.sg/jobs