இரு இடங்களில் திடீர் வெள்ளம்

இரு இடங்களில் திடீர் வெள்ளம்

1 mins read
e36c5d08-e794-4efd-b309-5dc11496c3ca
-

பலத்த மழை கார­ண­மாக நேற்று இரு இடங்­களில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. தீவு விரை­வுச் சாலை­யி­லி­ருந்து பிடோக் நார்த் அவென்யூ 3க்குள் நுழை­யும் துணைச் சாலை­யி­லும் உபி அவென்யூ 3, யூனோஸ் லிங்க் சந்­திப்­பி­லும் வெள்­ளம் ஏற்­பட்­ட­தா­க­வும் அந்­தப் பகு­தி­களில் உதவி நட­வ­டிக்கை மேற்­கொள்ள அதி­கா­ரி­கள் அனுப்­பப்­பட்­ட­தாக வும் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தெரி­வித்­தது. பிற்­ப­கல் 1 மணி முதல் கிழக்கு வட்டா ரத்­தில் சில கால்­வாய்­களில் நிரம்­பும் அள­வுக்கு வெள்ள நீர் ஓடி­ய­தாக கழ­கம் தனது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது. மத்­திய வட்­டா­ரத்­தில் மெக்ஃ பர்­சன், அப்­பர் பயா­லே­பார் ரோடு, தென்­வட்­டா­ரத்­தின் தஞ்­சோங் பகார் ரோடு போன்ற இடங்­க­ளி­லும் கால்­வாய்­களில் வெள்­ள­நீர் பாய்ந்­தோ­டி­ய­தாக அது குறிப்­பிட்­டது. பின்­னர் வெள்­ளம் தணிந்­து­விட்­ட­தாக பிற்­ப­கல் 2.35 மணி­ய­ள­வில் கழ­கம் கூறி­யது.