தேர்வு நேர நெருக்கடி

தேர்வு நேர நெருக்கடி

1 mins read
3ead946f-37e4-4ad2-ad67-e68e78513d4e
ஸ்ரீநிதி சுரேஷ்குமார், 19சமூகவியல் துறையில் பயில விருப்பம் -

மேல்­நி­லைத் தேர்­வுக்கு ஒரு வாரமே இருந்த நிலை­யில் குடும்ப உறுப்­பி­னர் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­பதை அறிந்­தார் ஸ்ரீநிதி.

தன் சுகா­தா­ரத்­தைப் பாது­காத்­துக்­கொள்ள ஒரு நண்­ப­ரின் வீட்­டில் தங்கி படிக்­க­வேண்­டிய சூழல் அவ­ருக்கு ஏற்­பட்­டது.

முதல் வாரத் தேர்­வு­க­ளைக் குடும்­பத்­தி­ன­ரி­ட­மி­ருந்து வில­கி­யி­ருந்த நிலை­யில் எழு­தி­னார் ஸ்ரீநிதி. தீபா­வ­ளி­யைக்­கூட தன் குடும்­பத்­தா­ரு­டன் கொண்­டாட இய­லா­மல் போனது.

"என் தொடக்­கக் கல்­லூரி வாழ்க்­கை­யின் ஒரு முக்­கி­யக் கட்­டத்­தில் என் குடும்­பத்­தி­னர் அரு­கில் இல்­லா­தது வேதனை அளித்­தது. ஓர் அறை­யில் தனி­யா­கப் படித்­துக்­கொண்­டி­ருந்த எனக்கு, என் நண்­ப­ரின் குடும்­பத்­தி­னர் பெரும் ஆத­ர­வாக இருந்து அன்­பா­கப் பார்த்­துக்­கொண்­ட­னர்," என்று தேசிய தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயின்ற 19 வய­தான ஸ்ரீநிதி சுரேஷ்­கு­மார் குறிப்­பிட்­டார்.

தன் முகம் ஒளி­யி­ழந்து காணப்­பட்­ட­தா­கத் தன் ஆங்­கில ஆசி­ரி­யர் கூறி­ய­போ­து­தான் மன உளைச்­ச­லில் தான் சிக்­கி­யி­ருப்­பதை அவர் உணர்ந்­தார்.

இருப்­பி­னும், படிப்­பில் கவ­னம் செலுத்த முடி­யாத நிலை­யில் மகள் இருக்­கி­றார் என்­ப­தைத் தன் பெற்­றோர் புரிந்­து­கொண்டு நடந்­து­கொண்­ட­னர்.

"இந்த வாழ்க்கை என்­னு­டை­யதே அன்றி வேறொ­ரு­வ­ரு­டை­யது அல்ல என்­பதை உணர்ந்­தேன்," என்­றார் அவர்.

மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யம் ஒன்­றில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் ஸ்ரீநிதி, சமூ­க­வி­யல் துறை­யில் பயில விரும்­பு­கி­றார்.