தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியல் வாய்ப்புகளை மங்கவைக்கும் உக்ரேன் போர்

2 mins read
b452e354-1c7f-46a1-ba4c-fb250d9f06dd
-

வர்த்தக, தொழில் அமைச்சர்: பணவீக்க நெருக்கடிகள் ஏறுமுகமாகும்

உக்­ரேன் நெருக்­கடி, சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்சி வாய்ப்­பு­களை மங்­க­வைத்து இருக்­கிறது. அதி­க­ரிக்­கும் எரி­சக்திச் செல­வு­கள் கார­ண­மாக பொருள்­க­ளின் விலை­கள் கூடும் நிலை ஏற்­பட்டு இருக்­கிறது என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யி­லும் பண­வீக்­கத்­தி­லும் ஏற்­ப­டக்­கூ­டிய உண்­மை­யான தாக்­கத்தை இப்­போ­தைக்கு மதிப்­பி­டு­வது சிர­ம­மான ஒன்று என்று கூறிய அவர், நிச்­ச­ய­மில்­லாத பல நில­வரங்­க­ளை­யும் சீர்­தூக்கிப் பார்க்கை­யில் விரை­வில் பண­வீக்க நெருக்கடி­கள் மேலும் அதி­க­ரிக்­கும் வாய்ப்பு இருப்­பது தெளி­வா­கத் தெரி­கிறது என்­றார் அவர்.

"நம்­மு­டைய பொரு­ளி­யல் இறங்கு­மு­கத்­துக்குத் திரும்­பும் ஆபத்­து­களும் கணி­ச­மாக அதி­கரித்து இருக்­கின்­றன," என்று திரு கான் கூறி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் வர­வு­செலவுத் திட்ட விவா­தத்­தின்­போது உக்­ரேன் போர் கார­ண­மாக ஏற்­படக்­கூ­டிய பொரு­ளியல் தாக்­கம் பற்றி அமைச்­சர் பேசி­னார்.

பொரு­ளி­யல் இந்த ஆண்­டில் 3% முதல் 5% வள­ரும் என்று சிங்­கப்­பூர் முன்­னு­ரைத்து இருக்­கிறது. மூலா­தாரப் பண­வீக்­கம் 2% முதல் 3% வரைப்­பட்­ட­தாக இருக்­கும் என்­றும் அது கணித்­துள்­ளது.

உக்­ரேன் பிரச்­சினை கார­ண­மாக சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லி­லும் நிறு­வ­னங்­க­ளி­லும் ஏற்­ப­டக்­கூ­டிய உட­ன­டி­யான நேரடித் தாக்­கத்தை இப்­போ­தைக்­குச் சமா­ளித்­து­விடலாம் என்­பதே சிங்­கப்­பூ­ரின் மதிப்­பீ­டாக இருக்­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இருந்­தா­லும் உக்­ரேன் பிரச்சினை முற்றுகிறது. அங்கு சூழ்­நிலை மிக வேக­மாக மாறக்­கூ­டும் என்று திரு கான் எச்­ச­ரித்­தார்.

உக்­ரேன், சிங்­கப்­பூ­ரில் இருந்து வெகுதொலை­வில் இருந்­தா­லும் உக்­ரேன் போர் கார­ண­மாக நம் அனை­வ­ரி­டத்­தி­லும் உண்­மை­யிலேயே கணி­ச­மான அள­வுக்குத் தாக்கம் ஏற்­படும் என்று அமைச்­சர் கூறி­னார்.

ரஷ்யா மீது உலக நாடு­கள் பல தடை­க­ளை­யும் விதிக்­கின்­றன. பொருள், சேவை விநி­யோ­கத்­திற்கு இடை­யூறு ஏற்­ப­டு­கிறது. இவற்­றின் கார­ண­மாக உலக எரி­பொ­ருள் மற்றும் இதர பொருள்­க­ளின் விலை வரும் வாரங்­களில் உயர்ந்­து­வி­டும் என்­றார் அவர்.

அனைத்­து­லக நில­வ­ரங்­க­ளுக்கு சிங்­கப்­பூர் போன்ற சிறிய, திறந்த பொரு­ளி­யல் நாடு­கள் எளி­தில் இலக்­கா­கி­வி­டும் என்­பதை உக்­ரேன் நில­வ­ரம் நினை­வூட்­டு­வ­தா­கக் கூறிய அமைச்­சர், அத்­த­கைய உலக நெருக்­க­டி­களில் இருந்து தப்­பித்து கொள்­வ­தற்­கான நமது அரணை பலப்­படுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்­றார்.

இதைச் செய்ய துடிப்­பு­மிக்க, பல­மு­னைப்­ப­டுத்­தப்­பட்ட, மீள்­தி­றன் கொண்ட பொரு­ளி­யலை பலப்­படுத்த வேண்­டும்; பிணைப்­பு­மிக்க, ஐக்­கி­ய­மான சமூ­கத்தை வலுப்­படுத்த வேண்­டும் என்று திரு கான் குறிப்­பிட்­டார்.