வாராந்திரத் தொற்று கூடியது

வாராந்திரத் தொற்று கூடியது

1 mins read
d18c2bb0-c617-4154-b221-286587358325
-

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யினரிடையே கொவிட்-19 தொற்று, சென்ற வாரத்­தைக் காட்டி­லும் இந்த வாரம் 17 விழுக்­காடு அதி­க­ரித்­த­தாக நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் சமூக அள­வில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­தா­கத் தற்­காப்­பு மூத்த துணை­ய­மைச்­சர் ஹெங் சீ ஹாவ் குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும் கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்­கையை அவர் வெளி­யி­ட­வில்லை.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் அலை தொடங்­கி­ய­தில் இருந்து, சிங்­கப்­பூ­ரில் 27,000 குழந்­தை­கள் பாதிக்­கப்­பட்­ட­தா­கச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 தொற்­றுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்ற குழந்­தை­களில் பெரும்­பாலா­னோர் தடுப்­பூசி செலுத்­திக் கொள்­ளா­த­வர்­கள் என்று இரண்டு மருத்­து­வ­ம­னை­களும் கூறின.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து நான்­கா­வது நாளாக கொவிட்-19 கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை 20,000க்கும் கீழ் பதி­வா­கி­யுள்­ளது.

ஞாயிற்­றுக்­கிழமை புதி­தாக 14,228 பேருக்குக் கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டதாகத் தெரி விக்கப்பட்டது.