செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
de554482-0d4f-4a76-82bb-6df2bb96cb88
-

கடல்­வாழ் உயி­ரி­னப் பாது­காப்பு

தேசி­ய பூங்­காக் கழ­கம், சென்ற ஆண்­டில் இருந்து சாங்­கி கடற்­கரை உள்­ளிட்ட கடற்­க­ரை­களில் கூடு­த­லான அதிகா­ரி­க­ளை­யும் தொண்­டூ­ழி­யர்­க­ளை­யும் பணி­யில் ஈடு­படுத்­து­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

விடு­மு­றைக் காலங்­களில் கடற்­க­ரை­க­ளுக்­குச் செல்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தால், அவர்­க­ளி­டம் கடல்­வாழ் உயிரி­னங்­க­ளைப் பாது­காப்­பது தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது நோக்­கம்.

கடற்­க­ரை­களில் காணப்­படும் கடல்­வாழ் உயி­ரி­னங்­களைத் தொடு­வதோ நசுக்­கு­வதோ அவற்­றைச் சேக­ரிப்­பதோ கூடாது என்று பொது­மக்­க­ளி­டம் அதி­கா­ரி­களும் தொண்டூழியர்­களும் நினை­வு­ப­டுத்­து­வர்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நாடா­ளு­மன்றத்­தில் இத­னைத் தெரி­வித்­தார். கடற்­க­ரைக்­குச் செல்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் நிலை­யில், கடல்­வாழ் உயி­ரி­னங்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டா­மல் பாது­காக்க அர­சாங்­கம் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் குறித்த கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

கொவிட்-19: பேருந்­து­க­ளுக்­குக் காத்­தி­ருக்­கும் நேரம் கூடி­யது

பேருந்து ஓட்­டு­நர்­க­ளி­டையே கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் அண்­மை­யில் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து, சுமார் 90 பேருந்துச் சேவை­க­ளுக்­குப் பய­ணி­கள் காத்­தி­ருக்­கும் நேரம் மூன்று நிமிடம் கூடி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போக்­கு­வ­ரத்­துக்­கான மூத்த துணை­ய­மைச்­சர் சீ ஹொங் டாட் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இத­னைத் தெரி­வித்­தார்.

அத்­தி­யா­வ­சி­யப் பேருந்­துச் சேவை­கள் தொடர்ந்து இயங்கு­வதை உறு­தி­செய்­யும் நோக்­கில், சேவை­க­ளுக்கு இடை­யி­லான இடை­வெளி நீட்­டிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் சொன்­னார். முத­லில் குறை­வான தேவை­யு­டைய பேருந்­துச் சேவை­க­ளுக்கு அந்­தத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

சமூக அள­வில் கிரு­மித்­தொற்று அதி­க­ரிக்­கும் வேளை­யில், பேருந்து ஓட்­டு­நர்­களில் சுமார் ஐந்து விழுக்­காட்­டி­னர் கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் பொதுப் போக்­கு­வரத்து நிறு­வ­னங்­களும் நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் சாத்­தி­ய­மான இடங்­களில் மாடிப் பேருந்­து­க­ளைச் சேவை­யில் ஈடு­ப­டுத்­தத் திட்டமிருப்­ப­தா­க­வும் மூத்த துணை அமைச்சர் தெரி­வித்­தார்.

அதிக சூரி­ய­ மின்சக்­தி பயனீட்டுக்கு முயற்சி

சிங்­கப்­பூ­ரில் நிறு­வ­னங்­கள் சூரி­ய­சக்­தி­யைப் பயன்­ப­டுத்­து­வதற்­கான மேலும் பல சாத்­தி­யக்­கூ­று­கள் குறித்து ஜூரோங் நகராண்மைக் கழகம் ஆராய்ந்­து­ வ­ரு­கிறது. வர்த்­தக, தொழில் துணை­ய­மைச்­சர் லோ யென் லிங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இந்­தத் தக­வலை வெளி­யிட்­டார்.

குறிப்­பாக, குறு­கிய காலக் குத்­த­கை­களை வைத்­திருக்கும் குத்­த­கை­தா­ரர்­கள், வாட­கை­தா­ரர்­கள் ஆகி­யோ­ரி­டையே சூரி­ய­சக்­திப் பயன்­பாட்டை வலி­யு­றுத்­தும் வழி­வ­கை­களைக் கழகம் ஆராய்ந்­து ­வ­ரு­கிறது என்­றார் அவர்.

2020ல் நடப்­புக்கு வந்த திட்­டத்­தின்கீழ், 15 ஆண்டுகள் அல்­லது அதற்­கும் கூடு­த­லான எஞ்சிய குத்­த­கைக் கால­மும் குறைந்­தது 800 சதுர மீட்­டர் தொடர்ச்­சி­யான மேற்­கூ­ரை­யும் உடைய வாட­கை­தா­ரர்­கள் சூரி­ய­சக்­தித் தக­டு­க­ளைப் பொருத்­த­வேண்­டி­யது கட்­டா­யம்.