தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377ஏ நடப்பில் இருக்கும்

2 mins read
5f3f8dbc-b0a4-497d-aab6-4eb7cab7f213
-

ஆண்­க­ளுக்­கி­டை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­ற­மாக வகைப்­ப­டுத்­தும் குற்­ற­வி­யல் தண்­ட­னைச் சட்­டப் பிரிவு 377ஏ தொடர்ந்து நடப்­பில் இருக்­கும் என்று மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது. அனால், அதைக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அனுமதியுடன் ஓரி­னப் புணர்ச்சி­யில் ஈடு­படும் ஆண்­கள் மீது வழக்கு தொடரமுடியாது என்­றும் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் குறிப்­பிட்­டது.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் உட்பட ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த சட்டப் பிரிவுக்கு எதிராக மூன்று ஆடவர்கள் சட்ட ரீதியாக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற தனியார் மருத்துவர் டாக்டர் ரோய் டான் செங் கீ, 'டிஸ்க் ஜாக்கி' எனும் இசைப் படைப்புக் கலைஞர் திரு ஜான்சன் ஓங் மிங், திரு பிரயன் சூங் ஆகியோர் சட்டப் பிரிவு 377ஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரு ரோய் டான் செங் கி, 'எல்ஜிபிடி' உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். திரு பிரையன் சூங், லாப நோக்கில்லா 'எல்ஜிபிடி' அமைப்பான 'ஊகாச்சாகா'வின் முன்னாள் நிர்வாக இயக்குநர்.

2007ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­மர் லீ சியன் லூங் குறிப்­பிட்ட அம்­சங்­கள், 2018ஆம் ஆண்டு அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அதி­காரி லூசி­யன் வோங் வெளி­யிட்ட செய்தி அறிக்கை ஆகி­யவை கருத்­தில்­கொள்­ளப்­ப­டு­வ­தால் சட்­டப் பிரிவு 377ஏ-யை அதி­கா­ர­பூர்­வ­மாக செயல்படுத்த இய­லாது என்று மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வலி­யு­றுத்­தி­யது.

1938ஆம் ஆண்டு வரை­யப்­பட்ட சட்­டப் பிரிவு 377ஏ, 12வது விதி­முறையை மீறு­வ­தாக இந்த மூன்று ஆட­வர்­களும் சென்ற ஆண்டு ஜன­வரி மாதம் நீதி­மன்­றத்­தில் வாதிட்­ட­னர். 12வது விதி­முறை சமத்­து­வத்­தைக் குறிக்­கிறது என்­பது இவர்­க­ளின் வாதம். அத­னால் இந்த சட்­டப் பிரிவு அகற்­றப்­ப­ட­வேண்­டும் என்று கூறி­னர்.

இந்த சட்­டப் பிரிவு, ஆண் ஓரி­னக் காத­லர்­க­ளுக்­கி­டையே இருக்­கும் பாலி­யல் உறவை மட்­டும்­தான் குற்­றம் என்று வகைப்­ப­டுத்­து­கிறது; பெண் ஓரி­னக் காத­லர்­கள், ஓரி­னக் காத­லர்­கள் அல்­லா­த­வர்­கள் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான பாலி­யல் செயல்­க­ளைக் குற்­றங்­க­ளாக வகைப்­ப­டுத்­த­வில்லை என்பது இவர்களின் வாதம்.

சட்­டப் பிரிவு 377ஏ-க்குக்­கீழ் ஓர் ஆண் மற்­றோர் ஆணு­டன் பாலி­யல் ரீதி­யான செய­லில் ஈடு­படு­வது குற்­ற­மா­கும். பொது இடங்­கள் மட்­டு­மின்றி தனி­யாக இருக்கும்­போதும் அத்­த­கைய செயல்­களில் ஈடு­ப­டு­வது குற்­றம்.

அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

பாலி­யல் செயல்­களில் ஈடு­படும் பெண்­க­ளைத் தண்­டிக்­க­மு­டி­யாது; அத­னால் இந்த சட்­டப் பிரி­வின்­கீழ் ஆண்­கள் பார­பட்­சத்­து­டன் நடத்­தப்­ப­டு­கின்­ற­னர் என்­பது இந்த மூன்று ஆட­வர்­க­ளின் வாதம்.