தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடுமையாகும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள்

1 mins read
2c827cb6-6a93-494e-b50d-a20f9a89be8f
-

இன்று முதல் பாலி­யல் குற்­றங்­க­ளைப் புரிவோருக்கு மேலும் கடுமை­யான தண்­ட­னை­கள் விதிக்­கப்­ப­ட­லாம்.

குற்­ற­வி­யல் சட்­டத்­தில் செய்­யப்­பட்ட திருத்­தங்­கள் சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வே­றின. அதைத் தொடர்ந்து இனி மான­பங்­கப்படுத்து­வோ­ருக்கு மேலும் கடு­மை­யான தண்­ட­னை­களை விதிக்க நீதி­மன்­றங்­க­ளுக்கு அதி­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

திருத்தங்கள் செய்யப்பட்ட குற்­ற­வி­யல் சட்டம் இன்று முதல் நடப்புக்கு வரு­வதை உள்­துறை, சட்ட அமைச்­சு­கள் கூட்டு அறிக்­கை­யின் மூலம் தெரிவித்தன.

மான­பங்­கச் சம்­ப­வங்­களும் ஒரு­வ­ருக்­குத் தெரி­யா­மல் தவ­றான முறை­யில் ரக­சி­ய­மா­கப் பட­மெ­டுக்­கும் செயல்­களும் சென்ற ஆண்டு அதி­க­ரித்­தன.

சென்ற ஆண்டு 1,480 மான­பங்கச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­ற­தாக காவல்­துறை ஆண்­டு­தோ­றும் வெளி­யி­டும் புள்ளிவிவ­ரங்­கள் தெரி­வித்­தன. 2020ஆம் ஆண்டு இந்த எண்­ணிக்கை 1,321ஆகப் பதி­வா­னது.

சென்ற ஆண்டு பதி­வான தவ­றான முறை­யில் ஒரு­வரை ரக­சி­ய­மா­கப் பட­மெ­டுக்­கும் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 467. இது, அதற்கு முந்­தைய ஆண்­டில் பதி­வா­ன­ எண்ணிக்கையை­விட அதி­கம்.