செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
c94584cd-fbb3-4826-80a8-5ae2cc106669
-

'சமரச மன்றத் தீர்ப்புகளில் தலையிடமாட்டோம்'

கடந்த 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான காலத்­தில் சுமார் 20 விழுக்­காட்டு சம­ரச மன்­றத் தீர்ப்­பு­களில் மட்­டும்­தான் சிங்கப்பூர் நீதி­மன்­றங்­கள் தலை­யிட்­டுள்­ளன. அப்­படி இருக்கை­யில் தாமதம் ஏற்பட்ட ஒரு கட்டுமானத் திட்டத்திற்காக 80 மில்லியன் வெள்ளி இழப்­பீடு கேட்டு எழுந்த விவ­கா­ரத்­தின் தொடர்பில் வழங்கப்பட்ட சமரச மன்றத் தீர்ப்­பில் நீதி­மன்­றம் தலை­யி­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் மிக­வும் குறைவு என்று சிங்­கப்­பூ­ரின் நீதி­மன்­றம் ஒன்று கூறி­யுள்­ளது.

சம­ரச மன்­றம் வழங்­கும் தீர்ப்பு­களை நீதி­மன்­றங்­கள் மாற்­று­வது சிங்­கப்­பூ­ரில் அதி­கம் நடக்­காத ஒன்று. குறிப்பிட்ட விவ­கா­ரங்­களில் மட்­டும்­தான் நீதி­மன்­றங்­கள் அவ்­வாறு செய்­தி­ருப்­ப­தாக மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதிபதி ஆண்ட்ரூ ஃபாங் தெரி­வித்­தார். அவரையும் நீதிபதி ஜுடித் பிர­காஷையும் கொண்ட மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தின் சார்­பில் அவர் பேசினார்.

பெயர் குறிப்­பி­டப்­ப­டாத நாட்­டில் ஓர் ஆலை­யைக் கட்­டுவது குறித்த விவ­கா­ரத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட மேல்­முறை­யீட்டு மனு­வைத் தள்­ளு­படி செய்­த­தைத் தொடர்ந்து இந்த நீதி­மன்­றம் நிலைமையை விளக்­கி­யது.

ஓவியங்களைப் படைத்த சிறப்புத் தேவையுடையோர்

மேடைப் பேச்சில் அனுபவம் இல்லாத எட்டு ஓவியர்கள் 100க்கும் அதிகமானோரின் முன்னிலையில் தங்களின் ஓவியங்களை மெய்நிகர் முறையில் படைத்தனர்

(படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்).

'ஆர்ட்ஸ்@மெட்டா' குழுவைச் சேர்ந்த ஓவியர்களுக்கு மேடைப் பேச்சு திறன்களை வளர்க்க சாங்கி விமான நிலையக் குழுமத்தின் நன்கொடை பிரிவான சாங்கி அறநிறுவனத்தின் முயற்சி இது. 'ஆர்ட்ஸ்@மெட்டா', சிறப்புத் தேவைகள் உள்ள ஓவியர்களைக் கொண்ட குழு.

கிளார்க் கீ ஒன்றுகூடல்: மேலும்

ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள்

கிளார்க் கீ பகுதியில் புத்தாண்டுக்கு முதல் நாளன்று கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை வெளிப்படையாக மீறியதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவுள்ளது. அவர்கள் 19லிருந்து 23 வயதுக்கு உட்பட்டவர்கள்.

கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அவர்களைத் தவிர 11 பேர் ஒவ்வொருவருக்கும் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது. புத்தாண்டுக்கு முதல் நாள் கிளார்க் கீயில் திட்டமிடப்படாத புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. அந்தக் கொண்டாட்டங்களின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தம் 10 பேர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 விதிமுறைகளை மீறிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆறாண்டு சிறைத் தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

'எஸ்பிஹெச்' வாக்கெடுப்பு

'கஸ்கேடன் பீக்' நிறுவனம் 'சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்' (எஸ்பிஹெச்) நிறுவனத்தை வாங்க முன்வந்தது குறித்து இம்மாதம் 22ஆம் தேதியன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 'எஸ்பிஹெச்' பங்குதாரர்கள் வாக்களிப்பர். 'எஸ்பிஹெச்' நிறுவனத்தை வாங்க 'கெப்பல் கார்ப்' நிறுவனம் முன்வந்தது. அதற்குப் போட்டியாக 'கஸ்கேடன் பீக்' முன்வந்தது.

'எஸ்பிஹெச்'சின் ஒவ்வொரு பங்கையும் 2.40 வெள்ளிக்கு வாங்க 'கெப்பல்' முன்வந்தது. 'கஸ்கேடன் பீக்' தர எண்ணும் தொகை 2.36 வெள்ளி. எனினும், 'கஸ்கேடன் பீக்' மொத்தத் தொகையை ரொக்கமாக வழங்கப்போவதாக கூறியது.