உக்ரேனில் தனது குடும்பத்திற்கு என்ன ஆனதோ என்று நேற்று முன்தினம் மிகுந்த கவலைக்கு ஆளானார் சிங்கப்பூரரான நத்தேலியா லொசொவ்ஸ்கா. உக்ரேனில் தனது தந்தை, சகோதரி உள்ளிட்டோருக்கு வாட்ஸ்அப் செயலிவழி தான் அனுப்பிய குறுந்தகவல்கள் அவர்களைச் சென்றடையவில்லை என்று திருவாட்டி லொசொவ்ஸ்கா கூறினார்.
சில மணிநேரத்திற்குப் பிறகு அரசாங்க ஊழியராகப் பணியாற்றும் முன்னாள் அரசதந்திரியான இவரின் தந்தை குறுந்தகவல்களுக்குப் பதிலளித்தார். இதற்கிடையே லொசொவ்ஸ்கா பெரும் மனவுளைச்சலுக்கு ஆளானார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த திரு மகேஷ் ராயை மணமுடித்த லொசொவ்ஸ்கா 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் (படம்).
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இவர்கள் ஓர் எடுத்துக்காட்டு.

