நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கர் மறைவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
"திருமதி சாந்தா பாஸ்கர் நேற்று நம்மைவிட்டுப் பிரிந்ததைக் கேள்விப்பட்டதும் வருத்தமடைந்தேன். சிங்கப்பூரில் இந்திய நடனத்திற்கு அவரே முன்னோடி, நமது பல கலாசார மரபை எடுத்துக்காட்டும் முன்னணிக் கலைஞர்," என திரு லீ ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
"சிங்கப்பூரின் கலை மரபை வளர்ப்பது மட்டுமின்றி அதன் தொடர்பிலான விவரங்களையும் திறன்களையும் இளம் தறைமுறையினரைக் கொண்டு சேர்ப்பதிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. மற்ற இனக் கலாசார அம்சங்களைச் சேர்த்தவாறு பல தலைமுறை நடனக் கலைஞர்களுக்குப் பல்வேறு பாரம்பரிய இந்திய நடனங்களைத் திருமதி பாஸ்கர் கற்றுத் தந்தார், " என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

