எளிதாகிவரும் வருமான வரித் தாக்கல்

எளிதாகிவரும் வருமான வரித் தாக்கல்

1 mins read
36130ae2-1dd6-45fa-a698-cc6ac3b04467
-

சிங்­கப்­பூ­ரில் வருமான வரித் தாக்கல் முறை எளி­தாக்­கப்­பட்டு வரு­கிறது. அத­னால் இந்த வரி ஆண்­டில் வரு­மான வரி செலுத்­தும் 10ல் ஏழு பேர் விவ­ரத்­தாக்­கல் செய்­யத் தேவை­யில்லை.

'என்­எ­ஃப்­எஸ்' எனும் விவ­ரத்­தாக்­கல் இல்­லாத சேவைக்கு 1.6 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் தகு­தி­பெ­று­கின்­ற­னர். இவர்­களில் கிட்­டத்­தட்ட 120,000 பேருக்கு, சென்ற ஆண்டு அறி­மு­க­மான 'டைரெக்ட் நோட்­டிஸ் ஆஃப் அசெஸ்­மெண்ட்' எனும் நேரடி மதிப்பீட்டு அறிக்கை திட்­டத்­தின்­கீழ் தாங்­கள் செலுத்­த­வேண்­டிய வரு­மான வரி விவ­ரங்­கள் நேர­டி­யாக அனுப்­பப்­படும்.

'ஐராஸ்' எனும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் இதைத் தெரி­வித்­தது.

இதன்­படி இவர்­கள் செலுத்­த­வேண்­டிய வரி விவ­ரங்­கள் முன்­ன­தா­கவே தாக்­கல் செய்­யப்­பட்­டிருக்கும்.

மோச­டிச் சம்­ப­வங்­கள் அதி­க­மாக நிகழ்­வ­தை­யொட்டி விழிப்­பு­டன் இருக்­கு­மா­றும் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் வரி செலுத்து­வோ­ரைக் கேட்­டுக்­கொள்­கிறது.