வெவ்வேறு சம்பவங்களில் மனைவியைத் துன்புறுத்திய 26 வயது முகமது சபீக்கிற்கு 16 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு, தீர்ப்பு வழங்கும்போது, மனைவியைத் துன்புறுத்தியது, காது, கன்னம் போன்ற பாகங்களில் தாக்கியது, பொது இடத்தில் கண்ணில் குத்தியது உள்ளிட்ட மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
22 வயது மனைவியின் முகத்துக்கு நேரே கத்தரிக்கோலை காட்டி மிரட்டிய அவர் பின்னர் தலை முடியை நறுக்கினார்.
உதவிகேட்டுக் கூக்குரலிட்ட மனைவி, வீட்டு உரிமையாளரிடம் பாதுகாப்பு நாடியதாகக் கூறப்பட்டது.
அதன்பிறகு அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
முன்னைய சம்பவங்களுக்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்ததாகக் காவல்துறை கூறியது.

