$290,000 காதல் மோசடி: பெண் மீது குற்றச்சாட்டு

$290,000 காதல் மோசடி: பெண் மீது குற்றச்சாட்டு

1 mins read
21a5e50f-729f-471f-a8b0-7c074818f1f4
-

காதல் மோசடி மூலம் சம்­பா­தித்த 290,000 வெள்­ளியை வைத்­தி­ருந்­த­தாக 47 வயது நூருல் அயின் அப்­துல் ஷுகூர் மீது நீதி­மன்­றத்­தில் நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

ஷாகி உண­வ­கத்­தின் முன்­னாள் இயக்­கு­ந­ரான அவர், 2020ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் 3 சம்­ப­வங்­களில் அந்­தத் தொகை­யைப் பெற்­றுக்­கொண்­ட­தா­க­வும், குற்­ற­வி­யல் நடத்தை மூலம் சம்­பா­தித்த தொகை அது என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் நீதி­மன்ற ஆவ­ணங்­கள் கூறு­கின்­றன.

தொகை எங்­கி­ருந்து கிடைத்­தது என்­ப­தற்கு உரிய விளக்­கம் தர அவர் தவ­றி­விட்­டார்.

இணை­யக் காதல் மோச­டி­யில் பணத்தை இழந்த 48 வய­துப் பெண் ஒரு­வர், டிசம்­பர் 2020ல் காவல்­து­றை­யி­டம் புகா­ர­ளித்­தார்.

இணை­யத்­தில் பழக்­க­மான ஆட­வர், பெண்­ணுக்கு அஞ்­சல் பொட்­ட­லம் ஒன்றை அனுப்பி இருப்­ப­தாக முத­லில் கூறி­னார். பின்­னர் சிங்­கப்­பூர் சுங்­கத் துறைக்­குக் கட்­ட­ணம் செலுத்தி அதைப் பெற்­றுக்­கொள்­ளும்­படி கேட்­டுக்­கொண்­டார்.

அதை நம்பி 16,000 வெள்ளி தொகையை இழந்­த­தா­க­வும், மீண்­டும் பணம் செலுத்­தும்­படி தொலை­பேசி அழைப்­பு­கள் வரு­வ­தா­க­வும் அந்­தப் பெண் புகா­ர­ளித்­தார்.

காவல்­துறை விசா­ர­ணை­யில், மேலும் ஒரு 58 வய­துப் பெண், 274,000 வெள்ளி பணம் செலுத்­தி­யது தெரி­ய­வந்­தது.

நூருல் தற்­போது 15,000 வெள்­ளி பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

மார்ச் 22ஆம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.