'பணிப்பெண்களுக்கு குறிப்பிட்ட ஓய்வு நேரத்தை ஒதுக்குவது குடும்பங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்'

2 mins read
fbf22bb1-b209-4a85-928e-c2240e8deba2
இல்லப் பணிப்பெண் களுக்கு மாதம் ஒரு முறை கட்டாய ஓய்வு நாள் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூலை மாதம் மனிதவள அமைச்சு அறிவித்தது. இந்தத் திட்டம் இவ்வாண்டு இறுதியில் அமலுக்கு வரலாம்.கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இல்­லப் பணிப்­பெண்­க­ளின் ஓய்வு நாளில் தடையற்ற ஓய்வு நேரத்தை வழங்­கு­வது பணிப்­பெண்களுக்கு மட்­டு­மல்­லா­மல் வெவ்­வேறு தேவை உடைய குடும்­பங்­க­ளுக்­கும் சிர­மத்தை ஏற்­ப­டுத்­தும்.

இதன் கார­ண­மாக ஓய்வு நாளில் பணிப்­பெண்­க­ளுக்கு குறிப்­பிட்ட ேநரத்தை ஒதுக்­கு­வதை மனி­த­வள அமைச்சு விரும்­ப­வில்லை என்று மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியோவ் ஹுவாங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

ஒவ்­வொரு குடும்­பத்­தி­ன­ரும் இல்­லப் பணிப்­பெண்­களும் அவர்­க­ளு­டைய தேவை­க­ளுக்கு ஏற்ப ெவவ்­வேறு ஏற்­பா­டு­களை செய்து கொண்­டுள்­ள­னர்.

இதில் முத­லா­ளி­களும் பணிப்­பெண்­களும் வெளிப்­ப­டை­யாக விவா­தித்து ஓய்வு நாளை ஏற்­பாடு செய்­வதே முக்­கி­யம் என்­றார் அவர்.

கடந்த ஜூலை மாதம் இல்­லப் பணிப்­பெண்­க­ளுக்கு மாதத்­திற்கு ஒரு முறை குறைந்­தது ஒரு நாள் கட்­டாய ஓய்வு வழங்­கும் திட்­டத்தை மனி­த­வள அமைச்சு அறி­வித்­தி­ருந்­தது.

இதனை பணத்­தைக் கொடுத்து ஈடு­கட்டக் கூடாது என்று முத­லா­ளிக­ளுக்கு அமைச்சு கூறி­யி­ருந்­தது. இல்­லப்­ ப­ணிப்­பெண்­க­ளுக்கு ஓய்வு நாளை வழங்­கு­வ­தால் அவர்­கள் புத்­து­ணர்­வு­டன் வேலைக்­குத் திரும்­ப­வும் வீட்­டுக்கு வெளியே தங்­க­ளுக்கு ஆத­ர­வான கட்­ட­மைப்பு­களை உரு­வாக்­க­வும் முடியும் என்று அமைச்­சர் கான் தெரி­வித்­தார்.

இந்­தப் புதிய ஓய்வு நாள் கொள்கை, முத­லா­ளி­களும் பணிப்­பெண்­களும் தங்­க­ளுக்கு இடையே ஏற்­பாட்டை செய்­து­கொள்­வ­தற்கு ஏது­வாக இவ்­வாண்டு இறு­தி­யில் அமைச்சு அமல்­ப­டுத்­து­கிறது.

தற்­போது, வாரம் ஒரு நாள் ஓய்­வுக்கு இல்­லப்­ ப­ணிப்ெ­பண்­கள் தகுதி பெறு­கின்­ற­னர்.

இருந்­தா­லும் இந்த ஓய்வு நாளில் பணிப்­பெண்­கள் வேலை செய்­ய­லாம்.

இதற்கு குறைந்­தது ஒரு நாள் சம்­ப­ளத்தை அவர்­க­ளுக்கு வழங்க வேண்­டும் அல்­லது அதே மாதத்­தில் வேறு ஒரு நாளில் ஓய்வு நாள் எடுத்­துக் கொள்ள அவர்­களை அனு­ம­திக்க வேண்­டும்.

நீ சூன் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான லூயிஸ் இங், இல்­லப் பணிப் பெண்­க­ளுக்­கான கட்­டாய ஓய்வு நாள் இடை­வி­டா­மல் 24 மணி நேரம் முழு­மை­யாக வழங்­கும் திட்­டம் உள்­ளதா என்று கேட்­டார்.

அதற்கு அமைச்­சர் கான் நேற்று நாடாளுமன்றத்தில் இவ்­வாறு பதில்­அளித்­தார்.