தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவில் உப்பைக் குறைப்பது குறித்து ஆலோசனை

1 mins read
7c488f8b-3cfc-45fc-8a74-a415545d762e
ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர், மக்களின் உண­வில் உப்­பைக் குறைப்­ப­தற்கு கூடு­தல் வழி­களை ஆராய்ந்து வரு­கிறது. அதன் பொருட்டு, உட்­கொள்­ளும் உப்­பின் அள­வைக் குறைத்து, இன்­னும் நலம் மிக்க வாழ்க்­கை­மு­றை­யை ஊக்­கு­விக்­கும் வழி­களை சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் ஆராய்ந்து வரு­கிறது.

உதா­ர­ண­மாக, சிங்­கப்­பூ­ரில் மக்­கள் அதி­கப்­ப­டி­யான உப்பை உட்­கொள்­வ­தற்கு அவர்­கள் வெளி­யில் சென்று அதி­கம் சாப்­பி­டு­வது ஒரு முக்­கிய கார­ண­மா­கும். அத­னால், குறை­வான உப்­பு­கொண்ட மாற்­றுப் பொருள்­க­ளைப் பயன்­படுத்­துவது பற்றி சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் உண­வுச் சேவை­த் துறை­யி­ன­ரு­டன் சேர்ந்து பணி­யாற்­று­வர்.

அத்­து­டன், நீரி­ழவு நோய், புகை­யி­லைப் பழக்­கம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான முயற்­சி­களும் தொட­ரும். அள­வுக்கு அதி­க­மான உப்பை உட்­கொள்­வ­தால், ரத்த அழுத்த அபா­யம் அதி­க­ரிக்­கும். இது மார­டைப்பு, வாதம் போன்ற உடல்­ந­லச் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தும்.

இளை­ய­வர்­கள், முதி­ய­வர்­கள் என சிங்­கப்­பூ­ரர்­க­ளின் உடல்­நலன் பொது­வா­கவே குறைந்து வரு­கிறது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங் நேற்று நாடா­ளு­மன்றத்­தில் கூறி­னார்.