ஜூரோங்வாசிகளின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்ய மூன்றாவதாக ஒரு பலதுறை மருந்தகம் 2028ஆம் ஆண்டிற்குள் திறக்கப்படவுள்ளதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளா்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய அவர், புதிய பலதுறை மருந்தகம் தாமான் ஜூரோங்கில் அமையவுள்ளதாகக் கூறினார். தற்போதுள்ள பயனியர், ஜூரோங் பலதுறை மருந்தகங்களுடன் புதிய பலதுறை மருந்தகம் இணைந்து ஜூரோங் வாசிகளுக்காக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், குவீன்ஸ்டவுன் பலதுறை மருந்தகம் 2030க்குள் மேம்படுத்தப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. அது தயாராகும் வரை தற்போதைய குவீன்ஸ்டவுன் மருந்தக வளாகம் இயங்கும்.

