வசதிகுறைந்த குடும்பங்களுக்கு தோழமை ஆதரவுத் திட்டம்

1 mins read
005b6e87-79d0-4048-9297-d60c8c7511f6
-

மண­மு­றிவு பெற்ற 50 வயது ஜெஸ் நான்கு குழந்­தை­க­ளின் தாயார். அவ­ருக்கு உத­வி­யும் வழி­காட்­டு­த­லும் தேவைப்­ப­டும்­போது அவ­ரு­டைய தோழி ஐரீன் சோவை நாடு­கி­றார். அந்த கிடங்கு உத­வி­யா­ளர் மாதம் சுமார் $2,000 சம்­பா­திக்­கி­றார். அவ­ரது குழந்­தை­கள் 17 மற்­றும் 27 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­கள். அவர்­களில் இரு­வர் வாடிக்­கை­யா­ளர் சேவைத் துறை­யில் பணி­பு­ரி­கின்­ற­னர். மற்ற இரு­வ­ரும் இன்­னும் படித்­துக்கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

காம்­லிங்க் எனும் சமூக இணைப்பு முன்­னோ­டித் திட்­டத்­தின்கீழ் தோழமை ஆத­ரவு முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக, 43 வய­தான திரு­மதி சோ, கடந்த ஆண்டு ஜெஸ்­ஸின் குடும்­பத்­து­டன் இணைக்­கப்­பட்­டார். அதிக மானி­யத்­து­டன் கூடிய வீவக வாடகை குடி­யி­ருப்­பு­களில் வசிக்­கும் குழந்­தை­க­ளைக் கொண்ட குறைந்த வரு­மா­னம் ஈட்டும் குடும்­பங்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வதை நோக்­க­மா­கக் கொண்டு, காம்­லிங்க் விரி­வான மற்­றும் ஒருங்­கி­ணைந்த ஆத­ரவை வழங்­கு­கிறது.

தொண்டூழியர்களாக உள்ள தோழர்கள் இந்தக் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதோடு சமூக சேவை அலுவலக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார்.