29 வீடுகள் தலா ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்பனை
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
20வது மாதமாக கடந்த பிப்ரவரியிலும் மறுவிற்பனை வீட்டு விலைகள் அதிகரித்தன. ஆனால் சொத்துச் சந்தையை மெதுவடையச் செய்வதற்காக கடந்த டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கை களால் விற்கப்படும் மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
கடந்த மாதத்தின் கழக மறுவிற்பனை வீட்டு விலை 0.6 விழுக்காடு அதிகரித்தது. ஜனவரியில் அந்த விலை உயர்வு 1.1 விழுக்காடாக இருந்தது.
சொத்து விற்பனை இணையத் தளங்களான '99.co', எஸ்ஆர்எக்ஸ் ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள் மறுவிற்பனை வீட்டு விலை அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பிப்ரவரியில் 12 விழுக்காடு விலை அதிகரித்துள்ளது.
முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டை களிலும் மறுவிற்பனை வீட்டு விலை அதிகரித்து காணப்படுகிறது.
ஐந்து அறை வீட்டு விலை ஏறக்குறைய 1.4 விழுக்காடு கூடியிருக்கிறது. மூவறை வீடுகளின் விலை 0.1 விழுக்காடு குைறந்தது.
இந்நிலையில் விற்கப்படும் வீடு களின் எண்ணிக்கை 22 விழுக்காடு குறைந்துள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த மாதம் சுமார் 1,904 கழக வீடுகள் கைமாறியுள்ளன. இதற்கு முந்தைய மாதத்தில் விற்கப்பட்ட 2,442 வீடு களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.
சென்ற பிப்ரவரியில் 29 மறுவிற்பனை வீடுகள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.
ஜனவரியில் விற்கப்பட்ட 27 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்ட வீடுகளில் ஏழு வீடுகள் மத்திய வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளன.
குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் நான்கு வீடுகளும் தோ பாயோ, கிளமெண்டி, பீஷான், காலாங்/வாம்ேபா ஆகிய வட்டாரங்களில் தலா மூன்று வீடுகளும் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டு உள்ளன.
கடந்த மாதம் ஒட்டுெமாத்த விற்பனையில் 29 மில்லியன் வெள்ளி வீடுகளின் பங்கு மட்டும் 1.5 விழுக்காடு ஆகும்.
பிப்ரவரியில் கேன்டோன்மண்ட் ரோட்டில் உள்ள பினாக்கிள்@டக்ஸ்டன் குடியிருப்புப் பேட்டையில் உள்ள ஐந்து அறை வீடு ஆக அதிக விலைக்கு விற்கப்பட்டது.
ஒரு மில்லியன் 308,000 வெள்ளிக்கு அந்த வீடு விற்கப்பட்டது.
கடந்த மாதம் குறைவான மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டதற்கு சீனப் புத்தாண்டில் நடவடிக்கைகள் குறைந்ததே காரணம் என்று சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றொரு காரணம் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
புரோப்நெக்ஸ் ஆய்வுப் பிரிவின் தலைவரான வோங் சியவ் யிங், முதல் முறையாக கடந்த மே மாதம் மறுவிற்பனை வீடுகளின் விற்பனை 2,000க்குக் கீழ் குறைந்தது என்று கூறினார். ஆனால் 2017 முதல் 2020 வரை முந்தைய ஆண்டு களுடன் ஒப்பிட்டால் கடந்த பிப்ரவரியில் கூடுதலாகவே கழக வீடுகள் விற்கப்பட்டுள்ளன என்று ஆரஞ்ச்டீ & டை நிறுவனத்தின் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் உதவி தலை வரான கிறிஸ்டின் சன் தெரிவித்துள்ளார்.

