$109 பி. வரவுசெலவுத் திட்டம் ஏற்பு

$109 பி. வரவுசெலவுத் திட்டம் ஏற்பு

2 mins read
a350f877-e5c1-41d6-9187-e139690e32f6
-

சிங்­கப்­பூர் அர­சாங்­கம் வரும் நிதி­யாண்­டில் செல­விட உள்ள $109 பில்­லி­யன் திட்­டங்­களை நாடா­ளு­மன்­றம் அங்­கீ­க­ரித்­தது.

புதிய வரவுசெல­வுத் ­திட்ட விவா­தத்தில் 66 உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொண்டு பேசினர். வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை மன்றம் 73 மணி நேரத்­திற்­கும் அதி­க­மாக விவா­தித்­தது.

இரண்டு வார கால­மாக நடந்த அந்த விவாத முடி­வில் நேற்று பேசிய நாடா­ளு­மன்­றத் தலை­வ­ர் குமாரி இந்­தி­ராணி ராஜா, கடந்த இரண்டு வாரங்­களில் கட்சி பாரா­மல் உறுப்­பி­னர்­களை கொவிட்-19 தொற்று பாதித்­தா­லும் விவா­திப்­பு­கள் கார­சா­ர­மாக இருந்­த­தாகக் கூறி­னார்.

விவா­தம் தொடங்­கி­ய­போது உக்­ரேன் போர் தொடங்­கி­ய­தை­யும் அவர் சுட்­டி­னார்.

"ஒரு நாட்­டின் சுதந்­தி­ரம், சுய தீர்­மான உரிமை, எல்லை இறை­யாண்மை ஆகியவை விலை­ம­திப்­பில்­லா­தவை.

"அவற்­றைக் கிள்­ளுக்­கீ­ரை­யா­கக் கரு­தக்­கூ­டாது என்­ப­தையே உக்­ரேன் போர் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நினை­வூட்­டு­கிறது," என்று அவர் கூறி­­னார். புதிய வர­வு­செ­ல­வுத்­ திட்­டம், மன்­றம் அங்­கீ­க­ரித்­துள்ள அதிக உரு­மாற்­றத்­துக்­கான திட்­டங்­களில் ஒன்று என குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.

நியா­ய­மான, பசு­மை­மிக்க, எல்­லா­ருக்கு­மான, மொத்­தத்­தில் மேலும் முன்னேற்ற கர­மான சிங்­கப்­பூ­ரை சாதிக்­கக் கூடியது என்று அத்­திட்­டத்தை அவர் வர்­ணித்­தார்.

வர­வு­செ­ல­வுத் ­திட்­டத்­தில் இடம்­பெற்று இருந்த ஜிஎஸ்டி வரி உயர்வு, வெளி­நாட்டு ஊழி­யர் தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் ஆகி­யவை அதி­கம் விவா­திக்­கப்­பட்ட அம்சங்­களில் சில­வா­கும்.

மன்­றக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளக்­கூ­டிய உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருந்­தா­லும் இந்த ஆண்டு விவா­தத்­தைப் போல் கடந்த ஐந்து ஆண்டு­களில் அதிக எண்­ணிக்­கை­யில் உறுப்­பினர்­கள் பங்­கெ­டுத்­த­தில்லை என்று குமாரி இந்­தி­ராணி குறிப்­பிட்­டார்.

மன்ற விவாதத்­தில் கார­சா­ர­மான விவாதம் நடப்­பது மதிப்­பு­மிக்க ஒன்று என்ற அவர், அதே­வே­ளை­யில் உறுப்­பினர்­கள் மன்­றத்­தி­லும் வெளி­யி­லும் தங்கள் செயல்­களில் நன்­ன­டத்­தையை நிலை­நாட்டி­ வ­ர­வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்­றார்.

இத­னி­டையே, விவா­த­த்தை முடித்­து­வைத்­துப் பேசிய நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின், "அர­சாங்­கத்­தின் தகவல் தொடர்­பு­கள் சிக்­க­லா­ன­வை­யாக இருப்­ப­தாக மக்­கள் புகார் தெரி­விக்­கக்­கூ­டும். ஆனால் நீங்­கள் பலன் தரும் செயல்­க­ளைச் செய்­யும்­போது விவ­ரங்­கள் என்­பது ஒரு பொருட்­டா­கவே இருக்­கும்," என்று கூறி­னார்.

சிங்­கப்­பூ­ர் சேமிப்பின் முக்­கி­யம் பற்றி கருத்து கூறிய அவர், வரும் ஆண்­டுகளில் தேவை ஏற்­படும்போது நிதி அமைச்சு தலை­யிட்டு அவ­சி­ய­மா­ன­வற்­றைச் செய்­யும் என்­ப­தில் தமக்கு ஐய­மில்லை என்­றார். ஆனால் சேமிப்பு இருந்­தால் மட்­டுமே அதைப் பயன்­ப­டுத்த முடி­யும் என்றாரவர்.