எரிபொருள் செலவு: திணறும் ஓட்டுநர்கள், நிறுவனங்கள்

எரிபொருள் செலவு: திணறும் ஓட்டுநர்கள், நிறுவனங்கள்

3 mins read
6acb9afe-9b2f-46c6-bdab-69bfdad175b2
-

பேருந்து, தளவாடப் போக்குவரத்து நிறுவனங்கள், டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்கள் தவிப்பு

எண்­ணெய் விலை உயர்வு கார­ண­மாக பேருந்து நிறு­வ­னங்­கள், தள­வா­டப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள், டாக்சி ஓட்டுநர்கள் பாதிக்­கப்­பட்டு இருக்­கிறார்கள்.

அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளு­டன் தான் பேசி­ய­தா­க­வும் செய்­வ­தறியாது தாங்­கள் தவிப்­ப­தாக அந்த நிறு­வ­னங்­கள் கூறி­ய­தா­க­வும் சண்டே டைம்ஸ் தெரி­வித்­தது.

அந்த நிறு­வ­னங்­க­ளுக்கு ஆகும் செல­வில் ஏறத்­தாழ 30 விழுக்­காடு போக்­கு­வ­ரத்து தொடர்­பா­ன­தா­கும்.

உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெடுத்து இருப்­ப­தால் எரி­பொ­ருள் விலை கூடி­விட்­டது. இத­னால் முத­லில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நிலை­யில் இந்த நிறு­வ­னங்­கள் இருக்­கின்­றன.

சில நிறு­வ­னங்­கள் செல­வைக் குறைக்­கத் தொடங்­கி­விட்­டன. சம்பளக் குறைப்பு அல்­லது சில நடை­மு­றை­களை அறவே நிறுத்­தி­வி­டு­வது போன்ற முடி­வு­களை இவை எடுத்து உள்­ளன. கூடு­தல் செல­வில் எந்த அள­வுக்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மிருந்து வசூ­லிக்க வேண்­டிய தேவை இருக்­கும் என்­பது பற்றி இதர நிறு­வ­னங்­கள் ஆராய்­கின்­றன.

'கோ பஸ் டிரான்ஸ்­போர்ட் சர்­விசஸ்' என்ற நிறு­வ­னத்­தின் உரிமை­யா­ள­ரான எட்­மண்ட் கோ, "நாங்­கள் பாதிக்­கப்­பட்­டு­விட்­டோம்," என்றார். கட்­டு­மான ஊழி­யர்­களை ஏற்றிச் செல்­வது உள்­ளிட்ட வாடகைச் சேவை­களை இந்த நிறு­வனம் வழங்கு­கிறது.

கட்­டுப்­ப­டி­யா­கா­த­தால் பேருந்­துச் சேவை­களை நிறுத்த வேண்­டிய சூழ்­நிலை வந்து­விட்­டது என்று எட்­மண்ட் கோ கூறி­னார்.

இந்த நிறு­வ­னத்­தி­டம் 11 பேருந்து­கள் இருக்­கின்­றன. "எரி­பொ­ருள் செலவு இரண்டு மடங்­காகி, மாதம் ஒன்­றுக்கு $1,500 ஆகி­விட்­டது. இதை வைத்து கூடு­த­லாக ஒரு வாகன ஓட்­டு­ந­ருக்கு வேலை கொடுத்­து­வி­ட­லாம்," என்றாரவர்.

செலவு அதி­க­ரித்து இருப்­பது பற்றி கருத்து கூறிய சிங்­கப்­பூர் பள்­ளிக்­கூ­டம் மற்­றும் தனி­யார் வாடகை பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தின் தலை­வ­ரும் 'தோங் டார் டிரான்ஸ்­போர்ட் சர்­விசஸ்' என்ற நிறு­வ­னத்­தின் முத­லா­ளி­யு­மான திரு பிலிப் பே, சூழ்­நி­லையை எப்படி சமா­ளிப்­பது என்­பது பற்றி தன்­நிறு­வ­ன­மும் இதர பேருந்து நிறு­வனங்­களும் ஆராய்ந்து வரு­வதாகக் கூறினார்.

கொஞ்­சம் கூடு­தலாக கட்­ட­ணத்தைச் செலுத்­து­மாறு பேருந்து நிறு­வ­னங்­கள் பய­ணி­க­ளைக் கேட்­டுக்­கொள்ள வேண்டி இருக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ருக்கு விமா­னம் மூலம் வரும் சரக்­கு­களைக் கப்­பல்­கள் மூலம் வேறு இடங்­க­ளுக்கு அல்லது இங்­குள்ள கிடங்­கு­க­ளுக்கு அனுப்­பும் சேவையை செய்­யும் 'நேஷ­னல் ஃபார்வ­டர்' என்ற நிறு­வனத்தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான அமிர்­த­லிங்­கம் துரை­ராஜூ, தள­வா­டப் போக்கு ­வ­ரத்து தொழில்­துறை இரண்டு பக்­க­மும் நெருக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

"ஒரு பக்­கம் விமான நிறு­வனங்­கள் கட்­ட­ணத்தை ஏற்­று­கின்­றன. இதில் ஒரு பகு­தியை வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து வசூ­லித்­து­வி­ட­லாம். ஆனால் உள்­ளூர் போக்கு ­வ­ரத்­துச் செலவு போன்ற செலவு­களைப் பொறுத்­த­வரை எதை­யும் செய்ய முடி­யாது," என்று அவர் தெரி­வித்­தார்.

சரக்­கு­களை அனுப்­பும் சேவை நிறு­வ­னங்­கள் ஒப்­பந்­தங்­க­ளின் அடிப்­ப­டை­யில் செயல்­ப­டு­வதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். கிடங்­குக் கட்­ட­ணங்­களும் கூடு­கின்­றன.

"எரி­பொ­ருள் விலை உயர்வினால் எங்­க­ளுக்கு லாபம் இல்லை. இதில் ஒளிவுமறைவு எது­வும் இல்லை. அதிக செலவை மற்­ற­வர்­கள் ஏற்கு­மாறு செய்­வது பற்­றி­யும் இப்­போ­தைக்கு எது­வும் தெரி­ய­வில்லை. இருந்­தா­லும்­கூட எல்­லா­வற்­றை­யுமே மீண்டும் திட்­ட­மிட வேண்­டிய சூழ்­நிலை இருக்­கும்," என்று திரு அமிர்­தலிங்­கம் விளக்­கி­னார்.

நிறு­வ­னத்­தின் கொள்­கை­கள் கார­ண­மாக பேருந்து ஓட்­டு­நர்­கள் இந்த ஆண்டு தொடக்­கம் முதல் பெட்­ரோல், டீசல் விலை ெசல­வில் 40 விழுக்­காடு வரை தாங்­களே ஏற்­றுக்­கொள்­கி­றார்­கள் என்று 'ஆர்­எஸ் டிரான்ஸ்­போர்ட்' என்ற பள்ளிக்­கூட பேருந்து நிறு­வ­னம் ஒன்றில் வேலை செய்­யும் ஊழி­யர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

"பள்­ளிக்­கூட பேருந்­துச் சேவை­களைக் குறைக்க முடி­யாது. ஆகை­யால் ஓட்­டு­நர்­கள்­தான் இப்­போது கவ­லை­யு­டன் இருக்­கி­றார்­கள். அர­சாங்­கம் சில உத­வி­களைச் செய்ய முடி­யும்," என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இங்கு சேவை­யாற்­றும் 80,000 டாக்சி மற்­றும் வாடகை கார் ஓட்டு­நர்­கள் அதிக எரி­பொ­ருள் செலவைத் தாங்­களே ஏற்­கி­றார்­கள். வேலையை விட்­டு­வி­ட­லாம் என்­று­கூட சிலர் யோசிக்­கி­றார்­கள்.

சூழ்­நி­லையை அரசாங்­கம் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் தேவை­யெ­னில் டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­களுக்கு மேலும் உதவி வழங்­கப்­படும் என்றும் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் இம்­மா­தம் 10ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் பேசியபோது தெரி­வித்­தார்.