பிள்ளையின் பிறந்தநாளை மரக்கன்று நட்டு கொண்டாடும் திட்டம் தொடக்கம்

பிள்ளையின் பிறந்தநாளை மரக்கன்று நட்டு கொண்டாடும் திட்டம் தொடக்கம்

2 mins read
79a5baf5-1010-4144-a770-733e23703c98
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நேற்று ஒரு குடும்பத்துடன் சேர்ந்து மரக்கன்று ஒன்றை நட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் மூன்று வயது வரை உள்ள பிள்­ளை­யைக் கொண்­டுள்ள ஒவ்­வொரு தம்­ப­திக்­கும் தங்­கள் குழந்தையின் பிறந்­த­நாளை நினைவு­கூ­ரும் வகை­யில் மரக்­கன்று ஒன்றை நடு­வ­தற்கு வாய்ப்­பளிக்­கும் 'குடும்ப மரங்­கள்' என்ற ஒரு செயல்­திட்­டம் தொடங்­கப்­பட்டு இருக்­கிறது.

அந்­தத் திட்ட தொடக்­கத்தைக் குறிக்­கும் வகை­யில் நேற்று 10 இளம் குடும்­பங்­கள் ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் மரக்­கன்­று­களை நட்­டன. சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ ஆகி­யோ­ரும் அந்த நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்­டார்­கள்.

தேசிய பூங்காக் கழகம் மரக்­கன்றை ஒவ்­வொரு குடும்­பத்­திற்கும் கொடுக்­கும். அதை நட்டு குடும்­பத்­தி­னர் அதற்குத் தண்­ணீர் ஊற்ற வேண்­டும்.

இந்த ஆண்டை, சிங்­கப்­பூர் (எஸ்ஜி) குடும்­பக்­ கொண்­டாட்ட ஆண்­டாக சமுதாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு வகைப்­ப­டுத்தி இருக்­கிறது. ஆண்டுக் கொண்­டாட்­டங்­களின் தொடக்க நிகழ்ச்சி­யாக குடும்ப மரங்கள் செயல்­திட்­டம் இடம்­பெறு­கிறது.

ஓராண்டு இடம்­பெ­றும் இந்­தப் புதிய குடும்­பக்­ கொண்­டாட்ட இயக்கம் குடும்ப அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆண்டு முழு­வ­தும் ஏற்­பாடு செய்­யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப உற­வை­யும் ஆதரவையும் நன்­னெ­றி­க­ளை­யும் பலப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் கூடிய செயல்­திட்டங்­களும் இடம்­பெ­றும்.

குடும்ப மரங்கள் செயல்­திட்டத்தை 'ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்' என்ற மன்­ற­மும் தேசிய பூங்காக் கழகமும் மேற்­பார்­வை­யிடு­கின்­றன.

அந்­தச் செயல்­திட்­டத்­தின் கீழ் மாதா­மா­தம் மரம் நடும் நிகழ்ச்சி நடக்­கும். இந்த ஆண்­டுக்கு அப்­பா­லும் வரும் ஆண்­டு­க­ளி­லும் இந்த நிகழ்ச்சி தொட­ரும்.

இந்­தச் செயல்­திட்­டத்­தில் கலந்து­கொள்ள குடும்­பங்­கள் https://www.nparks.gov.sg/treessg/one-million-trees-movement/familytrees என்ற இணை­யத்­தளத்­தில் பதிந்­து­கொள்­ள­லாம்.

பதி­யும் போது கண­வன் அல்லது மனைவி யாரா­வது ஒரு­வராவது சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெற்­ற­வ­ராக இருக்க வேண்­டும்.

குழந்­தைக்கு வயது 3க்குக் குறை­வாக இருக்க வேண்­டும். மரக்கன்றை நட்ட பிறகு அதன் நினைவாக மின்னணுச் சான்­றி­தழ் வழங்­கப்­படும்.